Topic : Sabbath

மேலும் அவர் செய்ய நினைத் திருந்த எல்லாக் கிரியைகளையும் அந்நாளில் விட்டு ஓய்ந்துகொண் டிருந்ததினாலே அவ்வேழாம் நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.

Genesis 2:3

சாபத் நாளை ஆசரிக்கும்படி நினைப்பாயாக.
ஆறுநாளும் நீ வேலை செய்து உன் தொழிலுக்கடுத்த கிரியைகளை எல்லாம் நடத்துவாயாக.
ஏழாம் நாளிலோ உன் தேவனாகிய கர்த்தருடைய சாபத்தாயிருப்பதால், அன்று நீயாவது, உன் குமாரன் குமாரத்தியாவது, உன் வேலைக்காரன் வேலைக்காரியாகிலும், உன் மிருக ஜீவன் அல்லது உன் வாசல்களில் இருக்கிற அந்நியனென்கிலும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.
ஏனென்றால் கர்த்தர் ஆறு நாளுக்குள் வானத்தையும் பூமியையும் அவைகளிலுள்ள சகலத்தையும் படைத்து ஏழாம் நாளிலே ஓய்வு கொண்டருளினமையால் கர்த்தர் சாபத் நாளை ஆசீர்வதித்துப் பரி சுத்தமாக்கினார்.

Exodus 20:8-11

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்தபடியே சாபத் நாளை அர்ச்சிக்கத்தக்கதாக நினைக் கக் கடவாய்.
ஆறு நாளும் உழைத்து உன் வேலையெல்லாஞ் செய்வாய்.
ஏழாம் நாளோ சாபத், அதாவது: உன் தேவனாகிய கர்த்த ருடைய ஓய்வு நாளாமே; அதிலே நீயானாலும், உன் குமாரன், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக் காரன், உன் வேலைக்காரியானா லும், உன் மாடு உன் வேசரி உனக் கிருக்கிற வேறெந்த மிருகமானாலும், உன் வாசலினுள்ளிருக்கிற அந்நிய னானாலும் யாதொரு வேலையுஞ் செய்ய வேண்டாம். நீ இளைப் பாறுவது போல் உன் வேலைக் காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாற வேண்டும் (ஆதி.2:2; யாத்.20:10; எபி.4:4).

Deuteronomy 5:12-14

மீளவும் சம்பவித்ததேதெனில், ஆண்டவர் ஓய்வுநாளில் விளை நிலங் களின் வழியாய்ப் போகும்போது, அவருடைய சீஷர்கள் முன் நடந்து கதிர் களைக் கொய்யத் தொடங்கினார்கள். (மத். 12:1-8; லூக். 6:1-5.)
அப்போது பரிசேயர் அவரை நோக்கி: இதோ ஓய்வுநாளில் செய்யத் தகாததை இவர்கள் செய்வானேன்? என்றார்கள். (உபாக. 23:25.)
அதற்கு அவர்: தாவீதென்ப வர் தமக்கு அவசியமாயிருக்கும்போது, தாமும் தம்மோடிருந்தவர்களும் பசியா யிருந்தபோது என்னசெய்தாரென்றும்,
பிரதான ஆசாரியனாகிய அபியத்தர் காலத்திலே அவர் எப்படித் தேவாலயத்தில் பிரவேசித்து, ஆசாரியர்களேயன்றி வேறொருவரும் புசிக்கத்தகாத (தேவ) சமுகத்து அப்பங்களைத் தானும் புசித்து, தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தாரென்றும் நீங்கள் ஒருபோதும் வாசித்ததில்லையோ? என்றார். (1 அரச. 21:6; லேவி. 24:9.) * 26-ம் வசனத்துக்கு மத். 12-ம் அதி. 4-ம் வசனத்தின் வியாக்கியானத்தைக் காண்க.
மேலும் அவர் அவர்களுக்குச் சொன்னதாவது: ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டதேயன்றி, மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக் கப்பட்டவனல்ல. * 27. ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டதென்பதின் கருத்தேதெனில், மனிதன் ஆறுநாள் உழைத்து வேலைசெய்தபின், ஒருநாள் இளைப்பாறி சரீரப் பெலனைக் காப்பாற்றவும், அந்த நாளில் ஆத்தும நன்மைக்காகச் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்யவும் அந்த நாள் எற்படுத்தப்பட்டிருக்கிறதென்பதாம்.
ஆதலால் மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார்.

Mark 2:23-28

பின்னும் அவர் ஓய்வுநாளிலே அவர்களுடைய ஜெப ஆலயத்தில் உபதேசித்துக்கொண்டிருந்தார்.
அப்பொழுது இதோ, பதினெட்டு வருஷமாய் நோக்காட்டு அரூபி பிடித் திருந்த ஒரு பெண்பிள்ளை அங்கேயிருந் தாள். அவள் கூனியாய்ச் சற்றும் நிமிர்ந்து பார்க்கக்கூடாதவளாயிருந்தாள்.
சேசுநாதர் அவளைக் கண்டு, அவளைத் தமதருகில் அழைத்து: ஸ்திரீ யே, உன் நோக்காட்டினின்று விடுதலை யாக்கப்பட்டாய் என்று சொல்லி,
அவள்மேல் தமது கரங்களை நீட்டினார். உடனே அவள் நிமிர்ந்து, சர்வேசுரனை ஸ்துதித்தாள்.
சேசுநாதர் ஓய்வுநாளிலே சொஸ் தப்படுத்தினதைப்பற்றி, ஜெப ஆலயத் தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்வதற்கு ஆறு நாட் கள் உண்டே, அந்த நாட்களிலே வந்து, செளக்கியம் பெற்றுக்கொள்ளுங்கள். ஓய்வுநாளிலோ இது தகாது என்றான்.
அப்பொழுது ஆண்டவர் அவனுக்குப் பிரத்தியுத்தாரமாக: கள்ள ஞானிகளே, உங்களில் ஒவ்வொருவனும் தன் எருதையாவது கழுதையையாவது ஓய்வுநாளிலே தொழுவத்தினின்று அவிழ்த்து, தண்ணீர் காட்டக் கொண்டுபோகிறதில்லையோ ?
அப்படியிருக்க இதோ, பதினெட்டு வருஷமாகச் சாத்தான் கட்டி வைத்திருந்த அபிரகாமுடைய குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளிலே இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையோ? என்றார்.
அவர் இவைகளைச் சொல்லும் போது, அவருடைய எதிராளிகள் அனைவரும் வெட்கப்பட்டார்கள். சகல ஜனங்களும் அவரால் மகத்துவப்பிரதாபமாய்ச் செய்யப்பட்ட சகலகாரியங்களையும்பற்றிச் சந்தோஷப்பட்டார்கள்.

Luke 13:10-17

ஆட்டைப்பார்க்கிலும் மனிதன் எவ்வளவோ அதிக மேன்மையுள்ளவன். ஆதலால் ஓய்வு நாட்களிலே நன்மை செய்வது தகுமென்று சொன்னார்.

Matthew 12:12

உங்கள் கர்த்தராகிய தெய்வம் நாமே; நமது கட்டளைகளின்படி நடந்து நமது நீதிச் சட்டங்களைக் கைக்கொண்டு அதின்படி நட வுங்கள்.
நாம் உங்களுடைய கர்த்த ராகிய தெய்வமென்று அறியும்படி நீங்கள் நமது ஓய்வுநாட்களைப் பரி சுத்தப்படுத்தி அவைகளை நமக்கும் உங்களுக்கும் அடையாளமாக வைத் துக்கொள்ளுங்கள் என்றோம்.

Ezekiel 20:19-20

நீங்கள் சாபத் நாளைத் தாண் டாதுகால்களைக் காத்து நமது பரி சுத்த தினத்தில், சரீர இச்சைக்கு இடங் கொடாதிருந்து, அந்தச் சாபத் நாளைச் பரிசுத்த நாளாகவும், ஆண்டவரு டைய பரிசுத்த மகிமையுள்ள நாளாக வும் பாவித்து, அந்நாளில் உங்கள் இஷ்டம்போல் போகாது, உங்கள் சரீர ஆசைக்கும் இடங்கொடாது, தகாத வார்த்தைதனைச் சொல்லாது இருப் பீர்களேயாமாகில்,
அப்போது ஆண்டவரில் பேரானந்தமடைவீர்கள்; நாமும் உங்க ளைப் பூதலத்தின் கண் உயர்ந்திருப் பனவெல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்துவோம்; உங்கள் பிதா யாக் கோபின் காணியாட்சியால் உங்க னைப் போஷிப்போம் என ஆண்டவ ருடைய திருவாய் மலர்ந்தருளிய தாமே.

Isaiah 58:13-14

அவ்வண்ணமே ஒருவன் நாள் வித்தியாசம் பார்க்கிறான். இன்னொருவன் எல்லா நாளையும் ஒரே சீராய் மதிப்பான். அவனவன் தன் எண்ணத்தில் பூரணமாய் நிற்கக்கடவான்.

Romans 14:5

ஆதலால் போஜனபானத்தைப் பற்றியாவது, பண்டிகைநாள், அமாவாசை, ஓய்வுநாள் இவைகளைப்பற்றியாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. (உரோ. 14:3-5.)
இவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருந்தன: இவைகளுக்கு உடலோ கிறீஸ்துநாதராமே.

Colossians 2:16-17

ஆறுநாள் வேலை செய்வீர்கள். ஏழாம் நாள் சாபத்தென்னும் ஓய்வு நாளாகையால் பரிசுத்தமுள்ள தென்று சொல்லப்படும். அதிலே ஒரு வேலையும் செய்ய வேண்டாம். அது உங்கள் வாசஸ்தலங்களிலெல் லாம் கர்த்தருடைய சாபத் நாளா யிருக்கும்.

Leviticus 23:3

நீயும் எஜிப்த்திலே அடிமையா யிருந்தாயென்றும், அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வல்ல கரத்தாலும் ஓங்கிய புயத்தா லும் புறப்படப் பண்ணினாரென்றும் நினைத்துக்கொள். அதுபற்றித் தானே சாபத் நாளை அநுசரிக் கும்படி உனக்குக் கற்பித்தார்.

Deuteronomy 5:15


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |