Topic : Neighbor

இதற்குச் சரியொத்த இரண் டாம் கற்பனை ஏதென்றால்: உன்னைப் போல உன் பிறனையுஞ் சிநேகிப்பா யாக, என்பதாம். இவைகளிலும் பெரி தான வேறே கற்பனை இல்லை என்றார். (லேவி. 19:18; மத். 22:39; உரோ . 13:9; கலாத். 5:14; இயா . 2:8.)

Mark 12:31

கடைசியாய் நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், அந்நியோந்நிய இரக்கமுள்ளவர்களும், சகோதர நேசமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், சாந்தமும் தாழ்ச்சியுள்ளவர் களுமாயிருங்கள்.

1 Peter 3:8

ஆனதால், நீங்கள் இப்போது செய்துவருகிறபடியே ஒருவரொருவரைத் தேற்றி, ஒருவரொருவருக்கு நன்மாதிரியாயிருங்கள்.

1 Thessalonians 5:11

அவனவன் தன் சுய பிரயோசனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோசனத்தைத் தேடக்கடவான். (1 கொரி. 10:33; உரோ. 15:2.)

1 Corinthians 10:24

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்துகொள்ளுங்கள். இவ்விதமாய் கிறீஸ்துநாதருடைய கட்டளையை நிறைவேற்றுவீர்கள்.

Galatians 6:2

எப்படியெனில் உன்னைச் சிநேகிக்குமாப்போல, உன் பிறனையும் சிநேகிப்பாயாக என்கிற இந்த ஒரே வாக்கியத்தில் நியாயப்பிரமாணம் முழுமையும் நிறைவேறுகிறது. (லேவி. 19:18; மத். 22:39; உரோ. 13:8.)

Galatians 5:14

ஆகையால் மனுஷர் உங்களுக்கு எதெதைச் செய்யவேணுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். ஏனெனில் வேதப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமிதுவே. (லூக் 6:31; தோபி. 4:16.)

Matthew 7:12

யாதொன்றையும் பிடிவாதத்தினாலாவது, வீண் மகிமையினாலாவது செய்யாமல், தாழ்ச்சியோடு ஒருவரை யொருவர் தனக்கு மேற்பட்டவர்களென்று எண்ணிக்கொள்ளுங்கள்.

Philippians 2:3

சகோதர அன்பு உங்களில் நிலைத் திருப்பதாக.
அந்நியரை உபசரிக்க மறவாதிருங் கள். அதனாலே சிலர் தாங்கள் அறியாம லே தேவதூதர்களை உபசரித்தது உண்டு. (உரோ. 12:13; 1 இரா. 4:9; ஆதி. 18:3.)

Hebrews 13:1-2

உங்களில் ஒவ்வொருவனும் நல் விருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி பிறனுக்குப் பிரியமாக நடக்கக்கடவான்.

Romans 15:2

இதனாலே நாம் இனிமேல் ஒருவருக்கொருவர் தீர்ப்பிடாதிருப்போமாக; ஆனால் நீங்கள் உங்கள் சகோதரனுக்கு இடறலாய் அல்லது துர்மாதிரிகையாய் இருக்கப்படாதென்று முக்கியமாய்த் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

Romans 14:13

ஆனதால் நமக்குக் காலமிருக்கும்போதே, எல்லாருக்கும், விசேஷமாய் விசுவாசக் குடும்பத்தாருக்கும் நன்மை செய்வோமாக.

Galatians 6:10

ஒருவரொருவரைத் தாங்கி, எவ னுக்காவது மற்றொருவன்மேல் முறைப் பாடிருந்தால், அதைப் பொறுத்துக் கொண்டு, ஆண்டவர் உங்களை மன்னித் ததுபோல் நீங்களும் உங்களுக்குள் ஒருவ ரொருவரை மன்னித்துக்கொள்ளுங்கள்.

Colossians 3:13

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரோடொருவர் நிலைமையான சிநேகமுள்ளவர்களாயிருங்கள். ஏனெனில் சிநேகமானது திரளான பாவங்களை மூடும். (பழ. 10:12.)

1 Peter 4:8

நன்மைசெய்யக் கற்றுக் கொள்ளுங்கள்; நீதியைத் தேடுங்கள், இடுக்கண்பட்டவனுக்கு உதவுங்கள், அனாதைப் பிள்ளைக்கு நீதி கூறுங்கள், கைம்பெண்ணைப் பாது காருங்கள்.

Isaiah 1:17

அப்படியிருக்க, (பிறனுக்குத்) தீர்ப் பிடுகிற மனுஷனே, நீ யாராயிருந்தா லுஞ்சரி, போக்குச்சொல்லுவதற்கு உனக்கு இடமில்லை. ஏனெனில் நீ பிறனுக்குத் தீர்ப்பிடுகிற விஷயத்தில் உனக்கே நீ ஆக்கினைத் தீர்ப்பிட்டுக் கொள்ளுகிறாய். எவைகளைப்பற்றித் தீர்ப்பிடுகிறாயோ, அவைகளை நீயே செய்கிறாய். (மத். 7:2.) *** 1. தீர்ப்பிடுகிற மனுஷனே:- தீர்வையிடுகிறது அல்லது தீர்ப்பிடுகிறது என்னும் பதங்கள் வேதாகமத்தில் பிறர்மேல் குற்றம் நினைக்கிறது என்கிற அர்த்தத்தில் அநேக இடங்களில் உபயோகிக்கப்பட்டுவருகிறது. இவ்விடத்திலும் அப்படியே என்று கண்டு கொள்க. அர்ச். சின்னப்பர் இந்த அர்த்தத்திலேயே இந்த வார்த்தைகளை வழக்கமாய்ப் பிரயோகிக்கிறார். மனுஷனே என்பது யூதஜனங்களைக் குறிக்கிறது. (கிராம்போன்.)

Romans 2:1

நீங்கள் ஒருவரை ஒருவர் சிநேகிக்கும்படியாக உங்களுக்குப் புதிய கட்டளையைக் கொடுக்கிறேன். நான் உங்களைச் சிநேகித்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரைச் சிநேகிக்கக்கடவீர்கள். (லேவி. 19:18; மத். 22:39; அரு. 15:12.) * 34. ஒருவரை ஒருவர் சிநேகிக்கவேண்டுமென்கிற இந்தக் கற்பனையானது புதுக்கற்பனையல்ல. ஆனால் நான் உங்களைச் சிநேகித்து வந்ததுபோல நீங்களும் ஒருவரொருவரைச் சிநேகித்து வாருங்கள் என்பது புதுக் கற்பனையாயிருக்கிறது. ஏனெனில் சேசுநாதர்சுவாமி அற்பரும் தமக்குச் சத்துராதிகளுமான மனுஷரை அளவின்றிச் சிநேகிக்கிறார். அவ்விதமே அவருடைய சீஷர்களும் பெரியவர் சிறியவரென்றும், மித்திரர், அமித்திரரென்றும் பாராமல் எல்லோரையும் சேசுநாதர்சுவாமியைக் குறித்துச் சிநேகிக்கவேண்டும் என்பதுதான் ஒரு புதுக் கற்பனையாகிறது.

John 13:34

பிறர்சிநேகம் ஒரு பொல்லாங்கையுஞ் செய்யாது; ஆகையால் சிநேகமானது வேதகற்பனைகளின் பூரண நிறைவேற்றமாமே.

Romans 13:10

(உபாதிக்கப்படுகிற) தன் நேசன் பேரில் தயை பண்ணாதவன் எவனோ அவன் கர்ததருக்குப் பயப் படாதவன்.

Job 6:14

சகோதர சிநேகத்தோடு அன்னியோன்னிய நேசமாயிருங்கள். கனம் பண் ணுவதில் ஒருவரையயாருவர் முந்திக் கொள்ளுங்கள். (எபே. 4:3; 1 இரா. 2:17.)

Romans 12:10

அதெப்படியென்றால், விபசாரம்பண்ணாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவாடாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சைப்படாதிருப்பாயாக (என்ற கற்பனைகளும்) இன்னும் வேறெந்தக் கற்பனை உண்டானாலும், அவை யாவும் உன்னை நீ சிநேகிக்கு மாப்போல, உன் பிறனையுஞ் சிநேகிப்பாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றது. (யாத்.20: 14; உபா.5:18; லேவி. 19:18; மத். 22:39.)

Romans 13:9

கர்த்தர் உங்களைப் பலுகச் செய்து, உங்கள் மட்டில் எங்களுக்குள்ள சிநேகம் எப்படியோ, அப்படியே ஒருவரொருவர்மட்டிலும் மற்றெல்லா மனுஷர்மட்டிலும் உங்களுக்குள்ள சிநேகத்தையும் ஓங்கிவளரப் பண்ணுவாராக.

1 Thessalonians 3:12

நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனுடைய சமுகத்தில் பரிசுத்தமும் மாசற்றதுமான தேவபக்தி ஏதெனில், அநாதைப்பிள்ளைகளையும், விதவை களையும் அவர்களுடைய துன்பத்தில் சந்திக்கிறதும், இப்பிரபஞ்சத்தினின்று தன்னை மாசற்றவனாய்க் காப்பாற்று கிறதும் என்க. * 14-15. இதிலே அர்ச். இயாகப்பர் இருவகைச் சோதனைகளைப்பற்றிப் பேசுகிறார். அதன் முதலாவது: கஸ்தி, துன்பம், வியாதி, தரித்திரம் முதலிய பாவத்துக்குச் சம்பந்தப்படாததும், ஆத்துமத்துக்குப் புறத்திப்பட்டதுமான சோதனைகள். அப்படிப் பட்ட சோதனைகளைச் சர்வேசுரன்தான் அனுப்புகிறார். ஆகையால் நல்ல கிறீஸ்துவன் அவைகளெல்லாம் சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட சோதனைகளென்று அறிந்து, சர்வேசுரனுடைய சித்தத்துக்கு இணங்கி, அவைகளைப் பொறுமையோடு சகித்துக் கொள்வதினால் பாக்கியவானாவான். ஏனென்றால் நாம் பொறுமையோடு சகித்துக் கொள்ளுகிற அப்படிப்பட்ட சோதனைகள் பாவத்துக்கு உத்தரிப்பாக ஆத்துமத்தைச் சுத்திகரிக்கவும், புண்ணிய பலன்களைப் பெறுவிக்கவும் உதவுவதுமன்றி, அவைகளுக்குச் சம்பாவனையாக மோட்சத்தில் நித்திய ஜீவிய முடியைப் பெறுவதற்குங் காரணமா யிருக்கின்றன. எல்லா அர்ச்சியசிஷ்டவர்களும் இப்படிப்பட்ட சோதனைகளால் பரீட்சிக்கப்படுவதுந்தவிர அர்ச்சியசிஷ்டதனத்தில் எவ்வளவுக்கு உயர்த்துபோகிறார்களோ, அப்படிப்பட்ட சோதனைகளால் அவ்வளவுக்கு அதிகமாய்ச் சோதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. அப்படியே தட்டானானவன் பொன்னை உலையில் சோதிக்கிறது போல் சர்வேசுரன் நீதிமான்களைப் பரிசோதிக்கிறாரென்று ஞானாகமம் 3-ம் அதிகாரம் 5-ம், 6-ம் வசனங்களில் சொல்லியிருக்கின்றது. இந்தப்பிரகாரமாய்ச் சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமாயிருந்த அபிரகாமுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது. இவ்வண்ண மாய் யோபு ஆகமம் முதலாம் அதிகாரம் 8-ம்வசனத்தில்: என் தாசனாகிய யோபு என்பவனைப்போல் சற்குணமுள்ளவனும், நீதிமானும், சர்வேசுரனுக்குப் பயந்து தின்மைக்கு விலகி நடக்கிறவனும் இல்லையென்று சர்வேசுரன் தாமே அவரைக் குறித்து சாட்சி கொடுத்தாலும், நிகரில்லாத துன்பங்களால் அவரைச் சோதிக்கும்படி சர்வேசுரன் சாத்தானுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படியே தோபியாஸ் சர்வேசுரனுக்குப் பிரியமுள்ளவராயிருந்ததினால், சோதனைகளால் பரீட்சிக்கப்பட வேண்டியதாயிருந்த தென்று தோபியாஸ் ஆகமம் 12-ம் அதிகாரம் 13-ம் வசனத்தில் சொல்லப்பட்டிக்கிறது. 2-ம் வகை சோதனையாவது: விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், பிறர்சிநேகம் முதலிய புண்ணியங்

James 1:27

எப்படியெனில், ஒருவரொருவரை நேசிக்கவேண்டுமென்பது ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்ட விசேஷமல்லோ. (அரு. 13:34; 15:12.)

1 John 3:11

அவ்வண்ணமே ஒருவன் நாள் வித்தியாசம் பார்க்கிறான். இன்னொருவன் எல்லா நாளையும் ஒரே சீராய் மதிப்பான். அவனவன் தன் எண்ணத்தில் பூரணமாய் நிற்கக்கடவான்.

Romans 14:5


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |