1. அப்படியிருக்க, (பிறனுக்குத்) தீர்ப் பிடுகிற மனுஷனே, நீ யாராயிருந்தா லுஞ்சரி, போக்குச்சொல்லுவதற்கு உனக்கு இடமில்லை. ஏனெனில் நீ பிறனுக்குத் தீர்ப்பிடுகிற விஷயத்தில் உனக்கே நீ ஆக்கினைத் தீர்ப்பிட்டுக் கொள்ளுகிறாய். எவைகளைப்பற்றித் தீர்ப்பிடுகிறாயோ, அவைகளை நீயே செய்கிறாய். (மத். 7:2.)
*** 1. தீர்ப்பிடுகிற மனுஷனே:- தீர்வையிடுகிறது அல்லது தீர்ப்பிடுகிறது என்னும் பதங்கள் வேதாகமத்தில் பிறர்மேல் குற்றம் நினைக்கிறது என்கிற அர்த்தத்தில் அநேக இடங்களில் உபயோகிக்கப்பட்டுவருகிறது. இவ்விடத்திலும் அப்படியே என்று கண்டு கொள்க. அர்ச். சின்னப்பர் இந்த அர்த்தத்திலேயே இந்த வார்த்தைகளை வழக்கமாய்ப் பிரயோகிக்கிறார். மனுஷனே என்பது யூதஜனங்களைக் குறிக்கிறது. (கிராம்போன்.)