34. நீங்கள் ஒருவரை ஒருவர் சிநேகிக்கும்படியாக உங்களுக்குப் புதிய கட்டளையைக் கொடுக்கிறேன். நான் உங்களைச் சிநேகித்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரைச் சிநேகிக்கக்கடவீர்கள். (லேவி. 19:18; மத். 22:39; அரு. 15:12.)
* 34. ஒருவரை ஒருவர் சிநேகிக்கவேண்டுமென்கிற இந்தக் கற்பனையானது புதுக்கற்பனையல்ல. ஆனால் நான் உங்களைச் சிநேகித்து வந்ததுபோல நீங்களும் ஒருவரொருவரைச் சிநேகித்து வாருங்கள் என்பது புதுக் கற்பனையாயிருக்கிறது. ஏனெனில் சேசுநாதர்சுவாமி அற்பரும் தமக்குச் சத்துராதிகளுமான மனுஷரை அளவின்றிச் சிநேகிக்கிறார். அவ்விதமே அவருடைய சீஷர்களும் பெரியவர் சிறியவரென்றும், மித்திரர், அமித்திரரென்றும் பாராமல் எல்லோரையும் சேசுநாதர்சுவாமியைக் குறித்துச் சிநேகிக்கவேண்டும் என்பதுதான் ஒரு புதுக் கற்பனையாகிறது.