Topic : Healing

உடனே பிள்ளையின் தகப்பன் அழுகையோடு பேரொலியிட்டு: ஆண்ட வரே! விசுவசிக்கிறேன், என் விசுவாசக் குறையில் எனக்கு உதவிசெய்தருளும் என்றான்.

Mark 9:23

அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானங் கட்டளையிட்டுக் கோது மையின் கொழுமையினால் உன் னைத் திருப்தியாக்கினார்.

Psalms 147:3

சேசுநாதர் அவனை நோக்கி: நீ போகலாம்; உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். என்றவுடனே அவன் பார்வையடைந்து, வழியில் அவரைப் பின்தொடர்ந்து போனான்.

Mark 10:52

சேசுநாதர் இந்த வார்த்தையைக் கேட்டு, பிள்ளையினுடைய தகப்பனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவ னாகமாத்திரமிரு, அப்போது (உன் மகள்) பிழைப்பாள் என்றார்.

Luke 8:50

நீங்கள் இரட்சணியம் அடையும் பொருட்டு, ஒருவருக்கொருவர் உங்கள் பாவங்களைச் சங்கீர்த்தனம் பண்ணி, ஒருவரொருவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் நீதிமானுடைய அயராத வேண்டுதல் மிகுந்த வல்லமையுள்ளது. * 16. பின்னும் நீங்கள் இரட்சணியமடையும்படிக்கு ஒருவருக்கொருவர் உங்கள் பாவங்களைச் சங்கீர்த்தனம் பண்ணுங்களென்று கற்பிக்கிறார். இங்கே ஒருவருக்கொருவர் என்கிற வார்த்தைக்கு அர்த்தமேதெனில், பாவப்பொறுத்தல் கொடுக்க அதிகாரம் பெற்ற குருமார்கள் ஒருவருக்கொருவர் என்றும் மற்றக் கிறீஸ்தஃவர்கள் அந்த அதிகாரம் பெற்றிருக்கிற தங்கள் குருமார்களிடத்திலென்றும் அர்த்தமல்லாது வேறல்ல. ஏனெனில், பாவப்பொறுத்தலைக் கொடுக்க அதிகாரமில்லாதவர்களிடத்தில் ஒருவன் தன் பாவங்களை அறிக்கையிட்டால் பிரயோஜனமென்ன?

James 5:16

உங்களில் ஒருவன் வியாதியாயிருக்கிறானோ, அவன் சபையின் குருக்களை வரவழைப்பானாக. அவர்கள் ஆண்டவருடைய நாமத்தினாலே அவனைத் தைலத்தால் பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணுவார்கள். (மாற். 6:13.) * 14. வியாதிக்காரர்கள் தங்களுக்காக வேண்டிக்கொள்ளவும், தங்கள்பேரில் தைலத்தைப் பூசவும் திருச்சபையின் குருமார்களை வரவழைக்கக் கற்பிக்கிறார். இது கத்தோலிக்கு உரோமன் திருச்சபையிலே எக்காலத்திலும் நடந்துவருகிற ஏழு தேவதிரவிய அநுமானங்களில் ஒன்றாகிய அவஸ்தைபூசுதல் என்றறிக.
அப்போது விசுவாசமுள்ள ஜெபம் வியாதிக்காரனை இரட்சிக்கும். ஆண்டவரும் அவனுடைய வருத்தத்தை இலகுவாக்குவார். அன்றியும் அவன் பாவங்களோடிருந்தால் அவைகள் அவனுக்கு மன்னிக்கப்படும். (மாற். 16:18.)

James 5:14-15

ஆனந்திக்கிற மனம் உடலை மலரச் செய்கிறது; துயரமான மனம் எலும்புகளைகூட வற்றச்செய் கிறது (பழ. 15:13).

Proverbs 17:22

நோயாளிகளைக் குணமாக்குங் கள், மரித்தோரை உயிர்ப்பியுங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தமாக்குங்கள்; பசாசுகளை ஓட்டுங்கள். இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.

Matthew 10:8

நமது நாமத்தினாலே மந்திரிக் கப்பட்ட நமது சனங்கள் மனந்திரும் பிச் செபம் பண்ணி, நமது முகத்தைத் தேடித் தங்கள் அக்கிரமமான வழி களை விட்டுத் தபம் பண்ணினால், அப்பொழுது நாம் பரலோகத்தில் இருந்து அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளி, அவர்கள் பாவங்களை மன்னித்து அவர்களுடைய தேசம் சேமமாயிருக்கச் செய்வோம்.

2 Chronicles 7:14

நமது நாமகரணத்தைப் பய பக்தியாய்ப் புசிக்கும் உங்களுக்கு நீதி யின் சூரியகிரணம் உதயமாகும்; அதின் செட்டைகளில் ஈடேற்றம் (கிடைக் கும்;) நீங்கள் கிளம்பி, கிடையினின்று புறப்பட்ட இளங்கன்றுகளெனத் துள்ளுவீர்கள் (லூக்.1:78).

Malachi 4:2

நாம் பாவங்களுக்கு மரித்தவர்களாய் நீதிக்கு ஜீவிக்கும்படி, அவர் தாமே சிலுவைமரத்தின்மேல் தமது சரீரத்தில் நமது பாவங்களைச் சுமந்தார். அவரு டைய காயங்களினால் சொஸ்தமாக்கப் பட்டீர்கள். (இசை. 53:5; 1 அரு. 3:5.)

1 Peter 2:24

நமது பாவங்களுக்காக அவர் காயப்பட்டனர்; நமது அக்கிரமங் களுக்காக நொறுக்கப்பட்டார்; நமது சமாதானத்துக்குரித்தாய கண்டனை அவர்மீது விழ, அவர் காயத்தால் நாம் இரட்சிக்கப்பட் டோம் (1கொரி. 15:3).

Isaiah 53:5

நீ திரும்பிப் போய் என் பிரசை யின் தலைவனான எசேக்கியாசை நோக்கி: உன் பிதாவான தாவீதின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவெனில்: உன் செபத்தைக் கேட்டோம்; (நீ சிந்திய) கண்ணீரை யுங் கண்டோம்; இதோ உன்னைச் சொஸ்தமாக்கினோம், நீ மூன்று தினத்தில் ஆண்டவருடைய தேவால யத்திற்குப் போவாய்;

2 Kings 20:5

பின்னும் அவர் ஓய்வுநாளிலே அவர்களுடைய ஜெப ஆலயத்தில் உபதேசித்துக்கொண்டிருந்தார்.
அப்பொழுது இதோ, பதினெட்டு வருஷமாய் நோக்காட்டு அரூபி பிடித் திருந்த ஒரு பெண்பிள்ளை அங்கேயிருந் தாள். அவள் கூனியாய்ச் சற்றும் நிமிர்ந்து பார்க்கக்கூடாதவளாயிருந்தாள்.
சேசுநாதர் அவளைக் கண்டு, அவளைத் தமதருகில் அழைத்து: ஸ்திரீ யே, உன் நோக்காட்டினின்று விடுதலை யாக்கப்பட்டாய் என்று சொல்லி,
அவள்மேல் தமது கரங்களை நீட்டினார். உடனே அவள் நிமிர்ந்து, சர்வேசுரனை ஸ்துதித்தாள்.
சேசுநாதர் ஓய்வுநாளிலே சொஸ் தப்படுத்தினதைப்பற்றி, ஜெப ஆலயத் தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்வதற்கு ஆறு நாட் கள் உண்டே, அந்த நாட்களிலே வந்து, செளக்கியம் பெற்றுக்கொள்ளுங்கள். ஓய்வுநாளிலோ இது தகாது என்றான்.
அப்பொழுது ஆண்டவர் அவனுக்குப் பிரத்தியுத்தாரமாக: கள்ள ஞானிகளே, உங்களில் ஒவ்வொருவனும் தன் எருதையாவது கழுதையையாவது ஓய்வுநாளிலே தொழுவத்தினின்று அவிழ்த்து, தண்ணீர் காட்டக் கொண்டுபோகிறதில்லையோ ?
அப்படியிருக்க இதோ, பதினெட்டு வருஷமாகச் சாத்தான் கட்டி வைத்திருந்த அபிரகாமுடைய குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளிலே இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையோ? என்றார்.
அவர் இவைகளைச் சொல்லும் போது, அவருடைய எதிராளிகள் அனைவரும் வெட்கப்பட்டார்கள். சகல ஜனங்களும் அவரால் மகத்துவப்பிரதாபமாய்ச் செய்யப்பட்ட சகலகாரியங்களையும்பற்றிச் சந்தோஷப்பட்டார்கள்.

Luke 13:10-17

அவ்விடத்திலுள்ள நோயாளிகளைச் சொஸ்தமாக்கி, சர்வேசுரனுடைய இராச்சியம் உங்களுக்குச் சமீபித்தது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.

Luke 10:9

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்த ரின் வாக்கியத்துக்குச் செவிகொடுத்து அவ ருடைய பார்வைக்குச் சரியானவைகளைச் செய்து, அவரின் கற்பனைகளுக்கெல்லாம் கீழ்ப்பட்டு, அவருடைய கட்டளை யாவை யும் அனுசரிப்பீர்களாகில், எஜிப்த்தியருக்கு நாம் வரப்பண்ணின வாதைகளில் ஒன்றையும் உங்கள் மேல் வரச்செய்யமாட்டோம். ஏனெ னில் நாம் உங்கள் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

Exodus 15:26

ஆண்டவருடைய இஸ்பிரீத்து வானவர் என்மேலிருக்கிறார். ஆதலால் அவர் என்னை அபிஷேகம்பண்ணித் தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங் கிக்கவும், இருதயம் நொறுங்கினவர்க ளைக் குணப்படுத்தவும்,

Luke 4:18

சேசுநாதர் அதைக் கேட்டுத் திருவுளம்பற்றினதாவது: சொஸ்தமுள்ள வர்களுக்கு வைத்தியன் வேண்டிய தில்லை, நோயாளிகளுக்கே வேண்டும்.

Matthew 9:12


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |