அப்பொழுது அவர்கள் உபவாசித்து, ஜெபஞ்செய்து இவர்கள்மேல் கரங்களை வைத்து, இவர்களைப் போக விடைகொடுத்தார்கள்.
*** 3. இந்தச் சடங்கினாலே அர்ச். சின்னப்பரும், பர்னபாவும் மேற்றிராசணப் பட்டத்துக்கு ஏற்படுத்தப்பட்டார்கள். அதுமுதற்கொண்டு கத்தோலிக்கு ரோமன் திருச்சபையில் குருப்பட்டமும், மேற்றிராசணப்பட்டமும், உபவாசம், ஜெபம், கை நீட்டுதல் என்கிற மூன்று திருச்சடங்குகளோடு கொடுக்கப்படுகிறது. அதற்காகவே வருஷத்தில் சதுர்காலங்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இதுமுதல் அர்ச். சின்னப்பர் யூதேயா தேசத்தைவிட்டுப் புறஜாதிகளான அஞ்ஞானிகள் நடுவில் வேதத்தைப் போதித்த வரலாறு சொல்லப்படுகிறது.
Acts 13:3