ஆகையால், சர்வேசுரன் உங்ளைச் சந்திக்கும் காலத்தில் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய வல்லமையுள்ள கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள். (இயா. 4:10.)
நமது நாமத்தினாலே மந்திரிக் கப்பட்ட நமது சனங்கள் மனந்திரும் பிச் செபம் பண்ணி, நமது முகத்தைத் தேடித் தங்கள் அக்கிரமமான வழி களை விட்டுத் தபம் பண்ணினால், அப்பொழுது நாம் பரலோகத்தில் இருந்து அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளி, அவர்கள் பாவங்களை மன்னித்து அவர்களுடைய தேசம் சேமமாயிருக்கச் செய்வோம்.
என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவனாயிருக்கி றேனென்று என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் ஆத்துமங்களுக்கு இளைப்பாற்றியைக் கண்டடைவீர்கள். (எரே. 6:16.) ஏனெனில் என் நுகம் இனிதாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது. (1 அரு. 5:3.)
* 30. சேசுநாதர்சுவாமியுடைய கட்டளையெல்லாம் தேவசிநேகம் பிறர்சிநேகங்களில் அடங்கியிருக்கிறதினாலேயும், சிநேகமானது எல்லாவற்றையும் இன்பமாக மாற்றுகிறதினாலேயும் சேசுநாதர்சுவாமி: என் நுகம் இனிது, என் சுமை இலகுவானது என்கிறார்.
உள்ளவைகளை அழிக்கும்படி சர்வேசுரன் உலகத்தில் இழிவானவைகளையும், நீசமானவைகளையும், இல்லாதவைகளையும் தெரிந்துகொண்டார். ஏனெனில் மாம்சமான எவனும் அவருடைய சமுகத்தில் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய் தருளினார்.
ஆகையால் நீ தர்மஞ் செய்யும் போது, கள்ள ஞானிகள், மனிதரால் சங்கிக்கப்படத்தக்கதாக ஜெப ஆலயங்களிலும் தெருவீதிகளிலும் செய் கிறது போல, உனக்கு முன்பாக எக் காளம் ஊதப்பண்ணாதே. அவர்கள் தங்கள் சம்பாவனையை அடைந்து கொண்டார்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஆண்டவரே! உமது வீட்டின் அலங்காரத்தையும் உமது மகிமை விளங்கச் செய்யும் இடத்தையும் விரும்பினேன். சர்வேசுரா! என் ஆத்துமாவை அவபத்தியுள்ளவர்களோடும், என் சீவனை இரத்தப் பிரியரோடும் போக்கடியாதேயும்.
சகோதரரே, நீங்கள் சுயாதீனத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆயினும் இந்தச் சுயாதீனத்தைச் சரீர இச்சைகளுக்கு ஏதுவாக்காமல், சிநேகத்தினால் ஒருவருக்கொருவர் ஊழியஞ் செய்யுங்கள்.
அவர்களுக்கு வசனித்ததாவது: என் நாமத்தினாலே இந்தச் சிறுவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள் ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; ஆகையால் உங்களெல்லாரிலும் எவன் அதிக சிறிய வனாயிருக்கிறானோ, அவனே அதிக பெரியவன் என்றார்.