ஆண்டவரை நம்புகிறவனோ ஆசீர்வதிக்கப்பட்டவன்; ஆண்டவர் அவனுடைய நம்பிக்கை. அவன் நீர் அருகில் நடப்பட்ட விருட்சத்திற்குச் சமம்; அது நயப்பில் வேரூன்றி இருக்கின்றமையால் உஷ்ண காலத்தில் அதற்குப் பயமில்லை; அதன் இலைகள் பசுமையோடிருக் கும்; வறட்சிகாலத்தில் அதற்குக்
கவலையில்லை; அது ஒருக்காலுங் கனிகொடாதிருக்காது (சங். 1:3).
நீ உன் விமரிசையில் ஊன்றி நில்லாமல், உன் முழு இருதயத்து டனே ஆண்டவரில் நம்பிக்கை வை. உன் சகல வழிகளிலும் அவரை நினைப்பாயாகில் அவர் உன் பாதச் சுவடுகளை நடத்துவார்.
நீ சலங்களைக் கடக்கையில் நாம் உன்னோடிருப்போம்; நதி களும் உன்னை அமிழ்த்தவறியாது, தீயில் உலாவினும் எரிந்துபோக மாட்டாய், அக்கினியும் உன் முன்
தணலற்று நிற்கும்.
ஆனால் அவன் சற்றுந் தத்தளியாமல், விசுவாசத்தோடு கேட்கக்கடவான்; ஏனெனில் தத்தளிக்கிறவன் காற் றினால் அடிபட்டு எப்பக்கத்திலும் கொண்டுபோகப்படுகிற கடல் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். (மாற். 11:24.)
ஆகாயப் பட்சிகளை நோக்கிப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறது மில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சி யங்களில் குவிக்கிறதுமில்லை . ஆகிலும் அவைகளை உங்கள் பரம பிதா போஷித்து வருகிறாரே. அவைகளிலும் நீங்கள் மிகவும் மேன்மையுள்ளவர்கள் அல்லவோ?
உங்கள் ஒழுக்கம் பேராசையின்றி, உள்ளது போதுமென்று இருக்கட்டும். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவரே சொல்லி யிருக்கிறார். (ஜோசு. 1:5.)
அவர் வானத்திலிருந்து (உதவி) அனுப்பி என்னை மீட்டார்; என்னை உபாதிக்கிறவர்கள் வெட்கிப்போகப் பண்ணினார்; சர்வேசுரன் தமது இரக் கத்தையும், உண்மையையும் அனுப்பி னார்; சிங்கக்குட்டிகளுடைய நடுவில் நின்று என் ஆத்துமத்தை விடுவித்தார்; நான் கலக்கங்கொண்டு நித்திரை செய் தேன்; ஏனெனில் மனுமக்களின் பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாம்; அவர் கள் நாவு கருக்கான பட்டயமாம்.
எனக்கு மிகவும் அன்பரே, நீங்கள் எல்லா ஞானிகளையும் நம்பாமல், அவர்கள் சர்வேசுரனிடத்திலிருந்து வந்தவர்களோ என்று சோதித்து அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில், உலகத்தில் அநேகம் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கிறார்கள். (யூதா. 4.)