Topic : Reward

நீங்கள் எதைச் செய்தாலும், மனிதருக்கென்று செய்யாமல், ஆண்டவருக்கென்று மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
ஆண்டவரிடத்தில் சுதந்திரத்தின் சம்பாவனையைப் பெற்றுக்கொள்வீர்களென்று அறிந்து, கிறீஸ்துநாதருக்கு ஊழியஞ்செய்யுங்கள். *** 23,24. உரோமையர்களுக்குள் அடிமைகள் என்ன வேலை செய்தாலும் அவர்களுக்குச் சுதந் திரமென்று ஒன்றுமில்லை. சர்வேசுரனுடைய ஊழியர்களாகிற கிறீஸ்தவர்கள் எவ்விதத் தாராயிருந்தாலும் ஆண்டவருடைய இராச்சியத்துக்குச் சுதந்திரக்காரராயிருக்கிறார்கள்.

Colossians 3:23-24

அவனவனுடைய கிரியைகளுக் குத் தக்கபடியே சர்வேசுரன் அவனவனுக்குப் பதிலளிப்பார். (மத். 16:27.)

Romans 2:6

ஆகையால் நமக்குப் பிரியமான சகோதரரே, ஆண்டவரிடத்தில் நீங்கள் படுகிற பிரயாசம் வீணாய்ப் போகிறதில்லையென்று அறிந்து, நிலை மையுள்ளவர்களாயும், அசையாத வர்களாயும், இடைவிடாமல் ஆண்ட வருக்குரிய கிரியைகளை மிகுதியாய்ச் செய்பவர்களாயும் இருப்பீர்களாக.

1 Corinthians 15:58

ஆகையால் நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருப்போமாக. ஏனெ னில் நாம் சோர்ந்துபோகாதிருந்தால், தக்க காலத்திலே பலனையறுப்போம். (2 தெச. 3:13.)

Galatians 6:9

இரக்கமுஞ் சத்தியமும் உன்னை விட்டுவிடாதிருக்கும்; அவற்றை உன் கழுத்துக்கு (ஆரமாய்ச்) சூடு வாய்; உன் இருதயத்தில் பதியவைப் பாய்.
அப்போது நீ தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாகக் கிருபை யையும், நல்லறிவையுங் கண்டடை வாய்.

Proverbs 3:3-4

எஜமான் அவனைப்பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழி யனே! நீ சொற்பக்காரியங்களில் பிர மாணிக்கனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரி யாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.

Matthew 25:21

மனிதன் கொடைகள் அவன் வழியை அகலமாக்கி, அரசனின் முன்பாக அவனுக்கு ஸ்தலத்தை உண்டாக்குகின்றது.

Proverbs 18:16

சோதனையைச் சகிக்கிறவன் பாக் கியவான். ஏனெனில் அவன் பரீட்சிக்கப் பட்டபின், சர்வேசுரன் தம்மைச் சிநே கிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண் ணின ஜீவிய கிரீடத்தைப் பெற்றுக்கொள் ளுவான். (யோப். 5:17; 2 தீமோ. 4:8.)

James 1:12

ஆனால் எழுதப்பட்டிருக்கிற படியே சர்வேசுரன் தம்மை நேசிக்கிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணியிருக்கிறவைகளைக் கண் கண்டதுமில்லை; காதுகேட்டதுமில்லை; மனிதருடைய இருதயத்திற்கு அவைகள் எட்டினது மில்லை. (இசை. 64:4.)

1 Corinthians 2:9

ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த மார்க்கத்திலேயே நடவுங்கள். அப்போது சீவிப்பீர்கள். உங்களுக்கும் நன்றாக இருக்கும். நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே உங்கள் நாட்களும் நீளித்திருக்கும்.

Deuteronomy 5:33

ஆகையால் நீ தர்மஞ் செய்யும் போது, கள்ள ஞானிகள், மனிதரால் சங்கிக்கப்படத்தக்கதாக ஜெப ஆலயங்களிலும் தெருவீதிகளிலும் செய் கிறது போல, உனக்கு முன்பாக எக் காளம் ஊதப்பண்ணாதே. அவர்கள் தங்கள் சம்பாவனையை அடைந்து கொண்டார்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 6:2

அடக்கவொடுக்கத்தின் மேல் பதவி தேவபயமும், திரவியமும், மகியையுஞ் சீவியமுமாம்.

Proverbs 22:4

கொடுங்கள், உங்களுக்கும் கொடுக் கப்படும்; அமுக்கவும் குலுக்கவும்பட்டுச் சரிந்துவிழும் நல்ல அளவை உங்கள் மடியில் போடுவார்கள். ஏனெனில் நீங்கள் அளந்த அளவினாலேயே உங்களுக்கும் பதில் அளக்கப்படும் என்றார். (மத். 7:2; மாற். 4:24.)

Luke 6:38

கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். (மத். 21:22; மாற். 11:24; லூக். 11:9-13.)

Matthew 7:7

விசுவாசமில்லாமல் சர்வேசுரனுக் குப் பிரியப்படவே முடியாது. ஏனெனில் சர்வேசுரனை அண்டிப் போகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பதிலளிக்கிறவ ரென்றும் விசுவசிக்கவேண்டும்.

Hebrews 11:6

ஆயினும் உன் தேவனாகிய கர்த் தரை நீ அங்கே தேடுவாய். அவரை உன் முழு இருதயத்தோடும் சஞ்சலம் நிறைந்த ஆத்துமத்தோடும் தேடி விரும்புவாயானால் அவர் உனக்கு அகப்படுவார்.

Deuteronomy 4:29

கிறீஸ்து சேசுநாதரில் சர்வேசுரன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

Philippians 3:14

உங்களுக்கு நன்மை செய்கிற வர்களுக்கே நீங்கள் நன்மை செய் தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் இவ்விதம் செய்கிறார்களே.

Luke 6:33

நீயோவென்றால் ஜெபம் செய் யும்போது உன் அறைக்குள் பிரவேசித் துக் கதவைச் சாத்தி அந்தரங்கத்தில் உன் பிதாவைப் பிரார்த்தித்துக்கொள். அப்போது அந்தரங்கத்தில் காண்கிற உன் பிதா உனக்குப் பலன் அளிப்பார். * 6. அந்தரங்கத்தில்:- நாம் செய்கிற நற்கிரியைகளில் சிலவற்றை மனிதர் கண் முன்பாகத்தான் செய்யும்படியாய் வரும். ஆனால் அவைகளை மனிதர் புகழ்ச்சிக்காகச் செய்யாமல் சர்வேசுரனுக்குப் பிரியப்படவேணுமென்கிற கருத்தோடே செய்யவேண்டியது.

Matthew 6:6

அக்கிரமி செய்த வேலை நிலை கொள்ளாது; நீதியை விதைப் பவனுக்கோவெனில் பிரமாணிக்க மான சம்பாவனையாம்.

Proverbs 11:18

மேலும் முதல்வர்களாகிய அநேகர் கடைசியானவர்களாகவும், கடைசியானவர்கள் முதல்வர்களாகவும் இருப்பார்கள். (மத். 20:16; மாற். 10:31; லூக். 13:30.)

Matthew 19:30

ஆகையால், சர்வேசுரன் உங்ளைச் சந்திக்கும் காலத்தில் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய வல்லமையுள்ள கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள். (இயா. 4:10.)

1 Peter 5:6

ஆண்டவர் சமுகத்தில் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்; அவர் உங்களை உயர்த்துவார். ( 1 இரா. 5:6: லூக். 14:11, 18:14.)

James 4:10

நீங்கள் பாக்கியவான்களாய் வாழும்படி தின்மையையல்ல, நன்மை யைத் தேடுங்கள்; அப்போது சேனை களின் நாயகரான ஆண்டவர் நீங்கள் சாதிப்பதுபோல் உங்களோடிருப்பார்.

Amos 5:14

எப்படியெனில் பாவத்துக்குக் கூலி மரணமாம். சர்வேசுரனுடைய வரப்பிரசாதமோ நம்முடைய ஆண்டவராகிய கிறீஸ்து சேசுநாதராலே நித்திய சீவியமாயிருக்கின்றது. *** 23. இந்த அதிகாரத்தில் அர்ச். சின்னப்பர் ஞானஸ்நானத்தின் மேன்மையையும், அதி லடங்கிய அதிசயத்துக்குரிய பிரயோசனத்தையும், பேறுபலன்களையும் மிகவுந் துலக்க மாகவுஞ் சிறந்த மேரையாகவுங் காட்டுகிறார். அதாவது: சேசுநாதர் நம்முடைய பாவங்களுக்காக மரித்ததுபோல, நாமும் ஞானஸ்நானம் பெறுகிறபோது பாவத்துக்கும், உலகத்துக்கும், ஆசாபாசத்துக்கும் மரிக்கிறோம். சேசுநாத ருடைய திருச்சரீரம் அடக்கம் பண்ணப்பட்டது போல, நாமும் ஞானஸ்நானத்தினாலே பாவத்திலும் உலகத்திலும் நின்று பிரிக்கப்பட்டு, மறைக்கப்படுகிறோம். சேசுநாதர் மூன்றாம் நாள் புது உயிரடைந்து உயிர்த்தெழுந்ததுபோல, நாமும் ஞானஸ்நானத்தில் புது உயிர் அடைந்து உயிர்க்கிறோம். சேசுநாதர் தம்முடைய மரணத்தினால் நம்முடைய பாவங்களுக்காகப் பிதாவின் நீதிக்கு உத்தரித்து, நமக்குப் பெறுவித்த பாவப்பொறுத்தலை ஞானஸ்நானத்தினால் சம்பூரணமாய் அடைகிறோம். சேசுநாதருடைய திருச் சரீரம் அடக்கபண்ணப்பட்டதினால், நாம் உலகத்துக்கு மறைந்தவர்களாய் அந்தரங்க சீவியமாய் நடக்க வரப்பிரசாதம் அடைகிறோம். சேசுநாதருடைய உத்தானத்தால், புது உயிராகிய இஷ்டப்பிரசாத சீவியமாய் நடக்கப் பேறு பெற்றவர்களாகிறோம். அப்படியே சேசுநாதர் ஒருவிசை மரித்து, மரணத்தை ஜெயித்தபின் இனி என்றென்றைக்கும் மரிக்கமாட்ட ரென்கிறதுபோல, ஞானஸ்நானம் பெற்ற நாமும் ஒருவிசை சேசுநாதருக்குள் பாவத்துக்கு மரித்து, இஷ்டப்பிரசாதமாகிய ஞான சீவியத்துக்கு உயிர்த்தபிறகு, இனிப் பாவத்தால் மரிக்காதிருக்கக்கடவோம். இப்படியே ஞானஸ்நானத்தினால் நித்திய பிதாவின் புத்திரராகவும், சேசுக்கிறீஸ்து நாதருடைய திருச் சரீரத்தோடும் ஆத்துமத்தோடும் நம்முடைய சரீரமும் ஆத்துமமும் ஒன்றிப்பதால், இஸ்பிரீத்துசாந்துவுக்கு ஆலயமாகவும் இருக்கும்படி, சேசுக்கிறீஸ்து நாதரால் பேறுபெற்றவர்களாகி, அவருடைய ஊழியத்துக்கு நம்மை முழுவதும் வலிய மனதோடு ஒப்புக்கொடுத்திருக்கிறதினால், இனி நாம் ஒருபோதும் பாவத்துக்குட்படாமல், சேசுநாதருடைய உயிர்த்த சீவியத்துக்கு ஒப்பாய் நடக்கக்கடவோம். ஏனெனில் பாவத்தின் கூலி மரணமும், அதன் முடிவு நித்திய நரகாக்கினையும், ஞான சீவியத்தின் முடிவு சததமான சீவியமும், அதன் சம்பாவனை நித்திய மோட்சமும் என்று போதிக்கிறார்.

Romans 6:23


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |