Topic : Nearness

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள். அவரை நாளும் நாடுங்கள்.

1 Chronicles 16:11

கனிந்த உங்கள் உள்ளம் அனைவர் முன்னும் விளங்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

Philippians 4:5

கருணையும் அருளும் என்னைத் தொடரும்; என் வாழ்நாளெல்லாம் என்னைத் தொடரும்: ஆண்டவர் தம் இல்லத்தில் நான் குடியிருப்பேன்; ஊழி ஊழிக்காலமும் குடியிருப்பேன்.

Psalms 23:6

வாழ்வுக்குச் செல்லும் வழியை நீர் எனக்குக் காண்பிப்பீர்: உம் திருமுன் எனக்கு நிறை மகிழ்ச்சியையும், உம் வலக்கையில் இடைவிடா இன்பத்தையும் நீர் காட்டுவீர்.

Psalms 16:11

ஆண்டவரிடம் நான் வேண்டுவது ஒன்றே, நான் விரும்புவதும் ஒன்றே: ஆண்டவருடைய இல்லத்தில் நான் வாழ்நாள் முழுவதும் குடியிருக்கவேண்டும்; ஆண்டவருடைய இனிமையை நான் சுவைக்கவேண்டும்; அவரது ஆலயத்தை நான் பார்க்கவேண்டும்.

Psalms 27:4

அப்பொழுது கடவுளின் ஆவி ஒதேதின் மகன் அசரியாசின் மேல் இறங்கியது.
உடனே அவர் ஆசாவிடம் சென்று அவனை நோக்கி, "ஆசாவே, யூதாவின் புதல்வரே, பென்யமீன் குலத்தினரே கேளுங்கள்: நீங்கள் ஆண்டவரோடு இருக்கும் வரை அவரும் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைப் புறக்கணித்தால், அவரும் உங்களைப் புறக்கணிப்பார்.
இஸ்ராயேல் நடுவே பல நாளாய் உண்மைக் கடவுள் இல்லை; போதிக்கக் குருக்களும் இல்லை; திருச்சட்டமும் இல்லை.
ஆனால் இஸ்ராயேலர் துன்பப் புயலில் அகப்பட்டுத் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் மனம் திரும்பி அவரைத் தேடுவார்கள். அப்பொழுது அவர்கள் அவரைக் கண்டடைவர்.
அக்காலத்தில் யாரும் அமைதியில் நடமாட முடியாது. ஏனெனில் மண்ணக மக்கள் அனைவருக்குள்ளும் பயங்கரக் குழப்பம் ஏற்படும்.
நாடு நாட்டையும், நகர் நகரையும் எதிர்த்து எழும். கடவுள் அவர்களைப் பற்பல இடுக்கண்களாலும் துன்புறுத்துவார்.
நீங்கள் கலங்க வேண்டாம்; தைரியமாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு கிடைக்கும்" என்றார்.
ஒதேதின் மகனான இறைவாக்கினர் அசரியாசு உரைத்த இறைவாக்கைக் கேட்ட போது ஆசா வீறு கொண்டான்; யூதா நாட்டிலும் பென்யமீன் நாட்டிலும், தான் கைப்பற்றியிருந்த நகர்களிலும், எப்பிராயீம் மலை நாட்டிலும் அகப்பட்ட சிலைகளை அகற்றி, ஆண்டவரின் மண்டபத்திற்கு முன்பாக இருந்த ஆண்டவரின் பலிபீடத்தைப் புதுப்பித்தான்.
பிறகு யூதா மக்களையும் பென்யமீன் மக்களையும், அவர்களோடு எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமேயோனிலும் வாழ்ந்து வந்த புறவினத்தாரையும் ஒன்று திரட்டினான். கடவுளாகிய ஆண்டவர் ஆசாவோடு இருக்கிறதைக் கண்டு இவர்களில் பலரும் இஸ்ராயேலை விட்டு அவனிடம் தஞ்சம் அடைந்தனர்.
அவர்கள் எல்லாரும் அரசன் ஆசாவின் பதினைந்தாம் ஆண்டில் யெருசலேமில் கூடி வந்தனர்.
தங்கள் கொள்ளைப் பொருட்களில் எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் கடாக்களையும் அன்று ஆண்டவருக்குப் பலியிட்டனர்.
அவர்கள் முழு ஆன்மாவோடும் முழு மனதோடும் தங்கள் முன்னோர்களின் கடவுளாகிய ஆண்டவரை தேடுவோம் என்றும்,
சிறியோர் பெரியோர், ஆண் பெண் அனைவரிலும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை யார் யார் தேடாமல் இருக்கிறார்களோ அவர்கள் சாகக்கடவர் என்றும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
பூரிகைகளும் எக்காளங்களும் ஒலிக்க, மிகுந்த ஆரவாரத்துடன் ஆண்டவரின் திருப் பெயரால் ஆணையிட்டார்கள்.
இதன் பொருட்டு யூதா மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். தங்கள் முழு இதயத்தோடும் ஆணையிட்டுத் தங்கள் முழுமனத்தோடும் அவரைத் தேடிக் கண்டடைந்தனர். ஆண்டவரும் அவர்களுக்கு அமைதி அளித்தார்.
ஒரு சிலைத்தோப்பிலே அரசனின் தாய் மாக்கா பரியப் என்ற அருவருப்பான ஒரு சிலையைச் செய்து வைத்திருந்தாள். அதைக் கேள்வியுற்ற ஆசா அவளை அரசியாய் இராதபடி விலக்கி வைத்தான். மேலும் அச்சிலையை உடைத்து நொறுக்கிக் கெதிரோன் பள்ளத்தாக்கிலே அதைச் சுட்டெரித்தான்.
மேடைகள் இன்னும் இஸ்ராயேலிலே ஒழிந்தபாடில்லை. ஆசாவோ தன் வாழ்நாள் முழுவதும் நேரிய வழியிலேயே நடந்து வந்தான்.
தன் தந்தையும் தானும் நேர்ந்து கொண்ட வெள்ளியையும் பொன்னையும் பலவிதத் தட்டுமுட்டுகளையும் ஆசா கடவுளின் ஆலயத்திற்குச் செலுத்தினான்.
ஆசாவினது ஆட்சியின் முப்பத்தைந்தாம் ஆண்டு வரை நாட்டில் போரே இல்லை.

2 Chronicles 15:2b

நீதிமான்கள் கூக்குரலிட்டனர்; ஆண்டவர் அவர்களுக்குச் செவி சாய்த்தார்: எல்லாத் துன்பங்களினின்றும் விடுவித்தார்.
உள்ளம் நொறுங்குண்டவர்களுக்கு அருகிலேயே உள்ளார் ஆண்டவர்: மனம் நைந்தவர்களைக் காத்தருள்வார்.

Psalms 34:17-18

தம் ஆவியில் அவர் நமக்குப் பங்கு தந்தமையால், நாம் அவருள் நிலைத்திருக்கிறோம் எனவும், அவர் நம்முள் நிலைத்திருக்கிறார் எனவும் அறிகிறோம்.

1 John 4:13

சமாதானத்தின் ஊற்றாகிய ஆண்டவர் எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்குச் சமாதானம் அருள்வாராக.

2 Thessalonians 3:16

ஆண்டவரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்: அவரது திருமுகத்தை என்றும் தேடுங்கள்.

Psalms 105:4

நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மைக் கைவிடாமலும், நம்மைத் தள்ளிவிடாமலும், நம் முன்னோரோடு இருந்ததுபோல் நம்மோடும் இருப்பாராக.

1 Kings 8:57

உமது ஆலய முற்றங்களில் ஒரு நாள் இருப்பது, வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உண்மையிலேயே மேலானது.

Psalms 84:10

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்; உங்களிடம் திரும்பி வருவேன்.

John 14:18

ஆண்டவர் அருகிலும் தொலைவிலும் இருக்கிறார்: "ஆண்டவரைக் கண்டடையக் கூடிய போதே, அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும் போதே, அவரைக் கூவியழையுங்கள்

Isaiah 55:6

யாரும் கடவுளை என்றுமே கண்டதில்லை; தந்தையின் அணைப்பிலுள்ள ஒரேபேறானவர்தாம் அவரை வெளிப்படுத்தினார்.

John 1:18

ஒரு காலத்தில் தொலைவில் நின்ற நீங்கள். இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் அவருடைய இரத்தத்தினால் அருகே கொணரப்பெற்றீர்கள்.

Ephesians 2:13

அங்குள்ள பணியாளரைக் குணமாக்கி, கடவுளின் அரசு உங்களை நெருங்கியுள்ளது' என்று மக்களுக்குத் தெரிவியுங்கள்.

Luke 10:9

ஆயினும் உமது பேரிரக்கத்தின் பொருட்டு நீர் அவர்களை அழித்து விடவுமில்லை; கைவிட்டு விடவுமில்லை. ஏனெனில் நீரோ இரக்கமும் தயையும் உள்ள கடவுள்!

Nehemiah 9:31

இறுதியாக, சகோதரர்களே, மகிழ்ச்சியோடு இருங்கள்; ஞான நிறைவடைய முயலுங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; ஒன்றுபட்டு வாழுங்கள்; சமாதானமாய் இருங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாகிய கடவுள் உங்களோடு இருப்பார்.

2 Corinthians 13:11

ஆகையால், மோயீசன் அவ்விடத்தில் நாற்பது பகலும் நாற்பது இரவுமாய் ஆண்டவரோடு தங்கி, உண்ணாமலும் குடியாமலும் இருந்தார். ஆண்டவரும் உடன்படிக்கையின் பத்து வாக்கியங்களையும் கற்பலகைகளில் எழுதியருளினார்.

Exodus 34:28


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |