வீரங்கொண்டு மனத்தைரிய மாயிருங்கள். அவர்களைப் பார்த்து அஞ்சவும் திகைக்கவும் வேண்டாம். ஏனெனில் உன் தேவனாகிய கர்த்தர் தானே உன்னை நடத்துபவர், அவர் உன்னை விடப் போவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்றான் (உபா. 7:2).
ஆண்டவரே, என் ஞாயத்தைக் கேட்டருளும்; என் மன்றாட்டுக்குச் செவி தந்தருளும். என் வார்த்தையில் கபடமில்லாததினால் நான் வேண்டிக் கொள்ளும் மன்றாட்டுக்கு செவி கொடும்.
ஆண்டவர் உங்களுக்காகப் போராடுவார், நீங்களோ பேசாதிருப்பீர்கள் (என்றுரைத்தான்.)
* 14-ம் வசனம். இங்கே மோயீசனுடைய சுகிர்த சாந்தகுணம் எவ்வளவு நேர்த்தியாய் விளங்குகிறது. அவர் இஸ்றாயேலியரின்பேரில் பட்சம்வைத்து அவர்களுக்கு எத்தனை உபகாரங்களைச் செய்துவந்திருந்தாலும் அவர்கள் நன்றிகெட்டவர்களாய் அவர் மேல் எப்போதும் முறுமுறுத்து விரோதித்து வந்தார்கள். ஆனால் அவர் சுவாமியுடைய மகிமையை மாத்திரந் தேடுகிறவராகையால் சகலத்தையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு வந்தார்.
உமது வலது கரத்திற்கு இடர் செய்கிறவர்களிடத்தில் நின்று கண் மணியைப் போல் என்னைக் காத்தரு ளும்; என்னைத் துன்பப்படுத்தின அக்கிரமிகளுடைய கையில் அகப் படாதபடிக்கு என்னை உமது செட்டைகளின் நிழலில் ஆதரியும்.