14. ஆண்டவர் உங்களுக்காகப் போராடுவார், நீங்களோ பேசாதிருப்பீர்கள் (என்றுரைத்தான்.)
* 14-ம் வசனம். இங்கே மோயீசனுடைய சுகிர்த சாந்தகுணம் எவ்வளவு நேர்த்தியாய் விளங்குகிறது. அவர் இஸ்றாயேலியரின்பேரில் பட்சம்வைத்து அவர்களுக்கு எத்தனை உபகாரங்களைச் செய்துவந்திருந்தாலும் அவர்கள் நன்றிகெட்டவர்களாய் அவர் மேல் எப்போதும் முறுமுறுத்து விரோதித்து வந்தார்கள். ஆனால் அவர் சுவாமியுடைய மகிமையை மாத்திரந் தேடுகிறவராகையால் சகலத்தையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு வந்தார்.