சேசுநாதர் பிரத்தியுத்தாரமாக: ஒருவன் ஜலத்தினாலும், இஸ்பிரீத்துசாந்துவினாலும் மறுபிறப்பு அடையாதிருந்தால், சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசிக்கமாட்டானென்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
* 4-5. மனுஷரெல்லோரும் ஜென்மதோஷத்தோடு உற்பவிக்கிறதினாலே பிறக்கிறபோது சரீர உயிரடைந்திருந்தாலும், ஆத்தும உயிராகிய இஷ்டப்பிரசாதமில்லாமல் பிறக்கிறார்கள். ஆகையால் ஜென்ம தோஷத்தைக் கழுவுகிற ஞானஸ்நானத்தை அவசியமாய்ப் பெற்றுத் தேவ இஷ்டப்பிரசாதமாகிற ஞான உயிரையும், ஞானப்பிறப்பையும் அடையவேண்டியது. கர்த்தர் இவ்விடத்தில் குறிக்கிற மறுபிறப்பும், ஞானப்பிறப்பும் இதுவேயன்றி, சரீரப் பிறப்புமல்ல, மறு ஜெனனமுமல்ல என்றறியவும்.
John 3:5