Topic : Kingdom

அநியாயம் செய்பவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்துபோக வேண்டாம். காமுகர், சிலைவழிபாட்டினர், விபசாரர்,
இயற்கைக்கு மாறான பாவம் செய்வோர், அதற்கு உடன்படுவோர், திருடர், பொருளாசை பிடித்தவர், குடிகாரர், பழி பேசுவோர், கொள்ளைக்காரர் இவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது.

1 Corinthians 6:9-10

ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்; இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

Matthew 6:33

சீடர் அவர்களை அதட்டினர். இயேசுவோ அவர்களிடம், "குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம். வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு இத்தகையோரதே" என்றார்.

Matthew 19:14

ஆண்டவரே, பெருமையும் மகிமையும் வல்லமையும் வெற்றியும் உமக்கே உரியன. புகழும் உமக்கே உரியது. விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தும் உம்முடையதே. அரசும் உம்முடையதே. ஆண்டவரே, நீரே மன்னருக்கு மன்னர், செல்வமும் மகிமையும் உம்முடையன.

1 Chronicles 29:11

"சிறு மந்தையே, அஞ்சாதே; ஏனெனில், உங்கள் தந்தை தம் அரசை உங்களுக்குக் கொடுக்கத் திருவுளம் கொண்டார்.

Luke 12:32

இயேசு மறுமொழியாக, "எவனும் மேலிருந்து பிறந்தாலன்றி, கடவுளுடைய அரசைக் காணமுடியாது என்று உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

John 3:3

அதுமுதல் இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார்.

Matthew 4:17

எனவே, இனி நீங்கள் அந்நியரல்ல, வெளிநாட்டாருமல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர், கடவுளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
அப்போஸ்தலர், இறைவாக்கினர் இவர்களை அடிக்கல்லாகவும். கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டமாயிருக்கிறீர்கள்.

Ephesians 2:19-20

அந்நாளில், ஆண்டவர் உலக முழுவதற்கும் அரசராவார்; ஆண்டவர் ஒருவரே, அவரது திருப்பெயரும் ஒன்றே.

Zechariah 14:9

நற்செய்தியை அறிவிக்கவும், சமாதானத்தைத் தெரிவிக்கவும், மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கவும், மீட்பைத் தெரிவிக்கவும், சீயோனைப் பார்த்து, "உன் கடவுள் அரசாளுகிறார்" என்று பறைசாற்றவும் வருகிறவருடைய மலரடிகள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!

Isaiah 52:7

நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே.

Matthew 5:10

இயேசு கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் பிறந்தாலன்றி கடவுளுடைய அரசில் நுழையமுடியாது.

John 3:5

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?' சோனைகளின் ஆண்டவரே இவர்: மாட்சிமிகு மன்னர் இவரே!'

Psalms 24:10

"காலம் நிறைவேறிற்று; கடவுளரசு நெருங்கிவிட்டது. மனந்திரும்பி, இந்நற்செய்தியை நம்புங்கள்" என்றார்.

Mark 1:15

ஏனெனில் ஆண்டவர் நம்முடைய நீதிபதி, ஆண்டவர் நமக்குச் சட்டம் இயற்றுகிறவர், ஆண்டவர் நம்முடைய அரசர், அவரே நம்முடைய மீட்பர்.

Isaiah 33:22

அங்குள்ள பணியாளரைக் குணமாக்கி, கடவுளின் அரசு உங்களை நெருங்கியுள்ளது' என்று மக்களுக்குத் தெரிவியுங்கள்.

Luke 10:9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |