ஆதலால் இப்போது கிறீஸ்து சேசு நாதருக்கு உட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாதவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு யாதேனுமில்லை
*** 1. இவ்வாக்கியத்தின் அர்த்தமாவது: பழைய ஏற்பாட்டின் பிரமாணம் பரிசுத்த முள்ளதாயிருந்தது என்றாலும் மாம்ச இச்சைகளுக்கு இன்னும் அடிமைப்பட்டவர்களாய் இருந்த யூதர்களுக்கு அது கொடுக்கப்பட்டதினாலே, அவர்களுடைய மாம்ச பலவீனத்தினாலே அந்தப் பிரமாணமும் பலவீனப்பட்டு, அதன் நீதியை அவர்கள் நிறைவேற்றுவதற்கு அவர்களுக்குப் பலன்கொடுக்கச் சத்துவமில்லாதிருந்தது. ஆகையால் சர்வேசுரன் தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாய் அனுப்பி, அவர் திரு மாம்சத்திலே பாவத்தை நடுத்தீர்த்துத் தண்டித்து, நிர்மூலமாக்கினதினால், மாம்ச இச்சைகளுக்கு அடிமைப்பட்டிருந்த பழைய மனிதனை உரிந்துபோட்டு, இஸ்பிரீத்துசாந்துவினாலாகிய புது மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிற நமக்குச் சர்வேசுரனுடைய கற்பனைகளை அநுசரிப்பதற்கு வேண்டிய திராணி உண்டாயிருக்கிறதென்று அர்த்தமாம்.
ஏனெனில் கிறீஸ்து சேசுநாதரிடத்திலுள்ள ஞான சீவியத்துக்குரிய பிரமாணமானது பாவத்துக்கும் மரணத்துக்குமுரிய பிரமாணத்தினின்று என்னை விடுதலையாக்கினது.
Romans 8:1-2