12. எல்லாவற்றிற்கும் எனக்கு உத்தரவுண்டு; ஆனாலும் எல்லாம் தகுந்ததல்ல. எல்லாவற்றிற்கும் எனக்கு உத்தரவுண்டு; ஆயினும் நான் ஒன்றிற் கும் என்னை அடிமையாக்கிக்கொள்ள மாட்டேன். (1 கொரி. 10:23.) *** 12. அஞ்ஞான நடுவனிடத்தில் கிறீஸ்தவர்கள் வழக்காடக்கூடாதாவென்று சிலர் கேட்பார்களாக்கும். உத்தரவுதான், என்றாலும் அப்படிச் செய்வது கிறீஸ்தவனுக்கு யோக்கியமல்ல. வேறுவழியாய் அதாவது, திருச்சபையாரைக்கொண்டு நியாயம் பெற்றுக் கொள்ளக்கூடுமாகில் அப்படிச் செய்வதே நலம். ஏனென்றால் கிறீஸ்தவன் சர்வேசுர னுடைய பிள்ளையாயிருக்கிறபடியினாலே, பசாசுக்கடிமையாயிருக்கிற அஞ்ஞானிக ளுடைய அதிகாரத்துக்கு மனம்பொருந்தித் தன்னைக் கீழ்ப்படுத்தப்போவது சரியல்ல வென்று சொல்லத்தகும்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save