நீ உன் விமரிசையில் ஊன்றி நில்லாமல், உன் முழு இருதயத்து டனே ஆண்டவரில் நம்பிக்கை வை. உன் சகல வழிகளிலும் அவரை நினைப்பாயாகில் அவர் உன் பாதச் சுவடுகளை நடத்துவார்.
ஆண்டவருடைய வீட்டுக்குப் போவோமென்று எனக்குச் சொல்லப் பட்டதுகளைப் பற்றிச் சந்தோஷப் பட்டேன். எருசலேம் நகரே! எங்கள் பாதங் கள் உன் ஒலிமுக வாசல்களில் நிலை நின்றன.
பூமியும், அதிலடங்கிய சகல மும், பூமண்டலத்தின் சக்கரமும், அதில் வாழுஞ் சகலருந் தேவனுக்குச் சொந்தம். ஏனெனில், அவரே சமுத்திரங் களுக்கு மேலே அதற்கு அஸ்திவாரம் போட்டு நதிகளுக்கு மேலே அதை ஸ்தாபித்திருக்கிறார்.
ஆகையால் நாளையைக்குறித்து கவலைப்படாதிருங்கள், ஏனெனில் நாளையத்தினம் தன்மேல் கவலை கொண்டிருக்கும். அன்றாடக்கவலையே அன்றன்றைக்குப் போதும்.
* 34. கவலைப்படாதிருங்கள்:- இவ்விடத்தில் ஆத்துமத்துக்குக் கெடுதியாக, உலக காரியங்களின்மேல் கவலையாகாதென்று சொல்லப்படுகிறது.
உமது வலது கரத்திற்கு இடர் செய்கிறவர்களிடத்தில் நின்று கண் மணியைப் போல் என்னைக் காத்தரு ளும்; என்னைத் துன்பப்படுத்தின அக்கிரமிகளுடைய கையில் அகப் படாதபடிக்கு என்னை உமது செட்டைகளின் நிழலில் ஆதரியும்.
நான் திராட்சச் செடி, நீங்கள் கொடிகள்; ஒருவன் என்னிலும், நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுதியான கனியைத் தருவான். ஏனெ னில் நான் இல்லாமல் உங்களாலே ஒன்றுஞ் செய்யமுடியாது. (2 கொரி. 3:5.)
அதெப்படியென்றால், நமக்குள்ளே ஒரே சரீரத்தில் பல அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் அல்லாததுபோல, பலபேராகிய நாமும் கிறீஸ்துநாதருக்குள் ஒரே சரீரமாகவும், தனித்தனியே பார்த்தால் ஒருவருக்கொருவர் உறுப்புகளாகவும் இருக்கிறோம்.
ஆண்டவர் உங்களுக்காகப் போராடுவார், நீங்களோ பேசாதிருப்பீர்கள் (என்றுரைத்தான்.)
* 14-ம் வசனம். இங்கே மோயீசனுடைய சுகிர்த சாந்தகுணம் எவ்வளவு நேர்த்தியாய் விளங்குகிறது. அவர் இஸ்றாயேலியரின்பேரில் பட்சம்வைத்து அவர்களுக்கு எத்தனை உபகாரங்களைச் செய்துவந்திருந்தாலும் அவர்கள் நன்றிகெட்டவர்களாய் அவர் மேல் எப்போதும் முறுமுறுத்து விரோதித்து வந்தார்கள். ஆனால் அவர் சுவாமியுடைய மகிமையை மாத்திரந் தேடுகிறவராகையால் சகலத்தையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு வந்தார்.
ஆண்டவரே, என் ஞாயத்தைக் கேட்டருளும்; என் மன்றாட்டுக்குச் செவி தந்தருளும். என் வார்த்தையில் கபடமில்லாததினால் நான் வேண்டிக் கொள்ளும் மன்றாட்டுக்கு செவி கொடும்.
எல்லா மனுப்புத்திரரிலும் நீர் சவுந்தரியமுள்ளவர்; உமது உதடு களிலே வடிவு ஊற்றப்பட்டிருக்கின் றது; ஆகையால் சர்வேசுரன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதித்தார்.