ஆகையால் ஒருவன் கிறீஸ்துநாதரிடத்தில் இருந்தால் அவன் புதுச் சிருஷ் டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந் துபோயின. இதோ, எல்லாம் புதிதாக் கப்பட்டன. (இசை. 43:19; காட்சி. 21:5.)
*** 17. நாம் மரித்தவர்களாயிருக்கையிலே தமக்காக நாம் ஜீவிக்கும்படிக்கு சேசுநாதர் நமக்காக மரித்து உயிர்த்தெழுந்தபடியால், அவரிடத்தில் நாம் புது ஜீவியத்தை அடைந்திருக்கிறோமாகில், பழைய மனிதனுக்குரியவைகளெல்லாம் ஒழித்துவிட்டு, இந்தப் புது ஜீவியத்துக்கு யோக்கியமான விதமாய் எல்லாக் காரியங்களிலும் நடக்கக்கடவோம். ஆகையால் இதுமுதல் ஒருவனையும் உறவின் முறையானோ அன்னியனோ, மேன்குலத்தானோ கீழ்குலத்தானோ, ஆஸ்திக்காரனோ தரித்திரனோ என்று மாம்ச சம்பந்தப்படி அவனை அறியாமலுஞ் சிநேகியாமலும், கிறீஸ்துநாதரைப்பற்றி மாத்திரம் அவனை அறியவுஞ் சிநேகிக்கவுங்கடவோம். கிறீஸ்துநாதரைமுதலாய் மாம்சத்துக்குரிய தன்மையாய் அறியாமலுஞ் சிநேகியாமலும், அவரை நம்முடைய ஆண்டவராகவும் இரட்சகராகவும் நித்திய ஜீவியத்தை நமக்குப் பெறுவிக்கிறவராகவும் அவரை அறிந்து சிநேகித்துச் சேவிக்கக்கடவோம்.
2 Corinthians 5:17