அவர் தம்முடைய இஸ்பிரீத்துவிலிருந்து நமக்குத் தந்தருளினதினால், நாம் அவரிலும், அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதாக அறிந்திருக்கிறோம். (அரு. 14:17.)
*** 13. இஸ்பிரீத்துவிலிருந்து: - அதாவது, சேசுநாதர்சுவாமி இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களில் நமக்கு வேண்டியதை அளிக்கிறாரென்று அர்த்தமாம்.
எனக்கு மிகவும் அன்பரே, நீங்கள் எல்லா ஞானிகளையும் நம்பாமல், அவர்கள் சர்வேசுரனிடத்திலிருந்து வந்தவர்களோ என்று சோதித்து அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில், உலகத்தில் அநேகம் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கிறார்கள். (யூதா. 4.)
அல்லாமலும், அக்கினிமயம் போன்ற பிரிந்த நாவுகள் அவர்களுக்குத் தோன்றி, அவர்களில் ஒவ்வொருவர் மேலும் வந்து தங்கினது. அவர்கள் எல்லாரும் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டு, பேசும் படிக்கு இஸ்பிரீத்துசாந்துவானவர் அவர் களுக்குக் கொடுத்த வரத்தின்படியே பற்பல பாஷைகளில் பேசத் தொடங்கி னார்கள். (மத். 3:11; அப். 11:16; 1 கொரி. 12:10; அரு. 7:39.)
ஆனால் நீங்கள் தீயோராயினும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கொடைகளைக் கொடுக்க அறிந்தி ருக்கும்போது, உங்கள் பரம பிதாவானவர் தம்மை வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நல்ல இஸ்பிரீத்துவைத் தந்தருளுவார் என்று திருவுளம்பற்றினார்.
பின்னர் மாறுத்தாரமாக அவன் என்னைப் பார்த்து: யஸாரோப பேலுக்கு ஆண்டவர் அருளும் வாக்கியமாவது: சேனையினாலு மன்று, (சுய) பலத்தினாலுமன்று நமது ஆவியால் மாத்திரமுண்டு எனச் சேனைகளின் தேவனார் செப்புகின் றார் என உரைத்தார்.
எப்படியெனில் மாம்சம் இஸ்பிரீத்துவுக்கு விரோதமாயும், இஸ்பிரீத்து மாம்சத்துக்கு விரோதமாயும் இச்சிக்கிறது. உங்களுக்கு இஷ்டப்பட்டவைகள் எவைகளோ, அவைகளை நீங்கள் செய்யாதபடி இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கின்றன.
அப்படியே நீங்கள் திரும்பவும் பயத்தோடுகூடிய அடிமைத்தனத் தின் புத்தியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடுகிற சுவீ காரப் பிள்ளைகளுக்குரிய புத்தியைப் பெற்றுக்கொண்டீர்கள். (2 தீமோ. 1:7.)
ஆகையால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: இஸ்பிரீத்துவுக்கு ஏற்றபிரகாரம் நடந்துகொள்ளுங்கள். அப்போது மாம்ச இச்சைகளை நிறை வேற்றமாட்டீர்கள். (1 இரா. 2:11.)