18. நாங்களெல்லோரும் ஆண்டவருடைய பிரதாப மகிமையைத் திறந்த முகமாய்த் தரிசித்து ஆண்டவ ருடைய இஸ்பிரீத்துவின் செயலால் ஒளிக்குமேல் ஒளிபெற்று, அந்தச் சாயலாக மறுரூபமாகிறோம். *** 18. 12-ம் வசனமுதல் கடைசிமட்டுமுள்ள வசனங்களின் அர்த்தமாவது: புதிய ஏற்பாட் டின் ஊழியருக்குண்டாயிருக்கிற நிகரற்ற மகிமையை நாங்கள் உத்தேசித்து மோயீசன் இஸ்ராயேல் பிரஜைகளோடு பேசும்போது தன் முகத்தை மூடினதுபோல் நாங்கள் மூடாமலும் கூச்சப்படாமலும் சுவிசேஷத்தை மிகுந்த தைரியத்தோடே பிரசங்கிக்கிறோம். மோயீசன் முகத்தின்மேல் போடப்பட்ட முக்காடு இஸ்ராயேல் பிரஜைகளின் இருதயக் கடினத்துக்கும் குருட்டாட்டத்துக்கும் அடையாளமாயிருந்தபடியால், அவர்கள் மோயீசன் ஆகமங்களை வாசிக்கும்போதெல்லாம் அந்த முக்காடு அவர்கள் இருதயங்களின்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிறாப்போலே மோயீசன் ஆகமங்களில் கிறீஸ்துநாதரைக்குறித்துச் சொல்லியிருக்கிற சாட்சியை அவர்கள் கண்டுபிடியாமல், அவரை இந்நாள்வரைக்கும் விசுவசியாதிருக்கிறார்கள். அவரை அவர்கள் விசுவசிக்கும்போது அந்த முக்காடு எடுபடும். அதுவும் சேசுக்கிறீஸ்துநாதரால்தான் ஆகவேண்டும். எங்கள் இருதயமோ அப்படிப்பட்ட முக்காட்டினால் மூடப்படாமல், இஸ்பிரீத்துசாந்துவின் வரப்பிரசாதமாகிய ஞான வெளிச்சத்தைக்கொண்டு ஞானப்பிரகாசத்தை நாளுக்குநாள் அதிகமதிகமாய் அடைந்து அந்தப் பிரகாசத்தினால் ஆண்டவருடைய மகிமையைத் தரிசிக்கிறாப்போல் இவ்வுலகத் திலே தரிசித்து மறுவுலகத்திலே அதற்கு ஒப்பானவர்களாவோம் என்று அர்த்தமாம்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save