ஆகையால் சகோதரரே, எங்கள் பிரசங்கத்தினாலாவது, நிருபத்தினாலாவது நீங்கள் கற்றுக்கொண்ட போதக முறைகளைக் கடைபிடித்து நிற்பீர்களாக. (1 தெச. 2:13; 4:7.)
* 14. வாக்கினாலாவது, எழுத்தினாலாவது தங்களுக்குப் போதிக்கப்பட்ட பாரம் பரியங்களை வித்தியாசமொன்றின்றி ஒரே தன்மையாய்க் காப்பாற்றி அவைகளில் நிலைத்திருக்கவேண்டுமென்று அர்ச். சின்னப்பர் தெசலோனிக்கேயருக்குக் கற்பிக்கிறார். ஆகையால் வேதப்பிரமாணத்தில் எழுதப்பட்ட வேதசத்தியங்களை மாத்திரம் கைக் கொண்டு, வாக்கினால் போதிக்கப்பட்டவைகளை ஏற்றுக்கொள்ளவொண்ணாதென்று சொல்லுகிறவர்கள் அர்ச். சின்னப்பருடைய போதகத்துக்கு விரோதமாய்ப் போதிக் கிறார்களென்றறிக. போதக முறைகள்: - அப்போஸ்தலர் எழுதின நிருபங்களைப்போலவே அவர்கள் எழுதாமல் வாய்மொழியாய்ப் போதித்தும், அவர்கள் எழுதித்தந்து காணாமற்போன நிருபங்களில் அடங்கியதும், கிரியைகளால் செய்து காட்டிய பாரம்பரை முறைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இங்கே கற்பிக்கப்படுகிறது.
2 Thessalonians 2:14