நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! இறந்தோரினின்று எழுந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால், இறைவன் தம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப நமக்கு வற்றாத நம்பிக்கையைத் தரும் புதுப்பிறப்பை அளித்தார்.
நீங்கள் புதிதாய்ப் பிறந்துள்ளீர்கள். அப்பிறப்பு உங்களுக்கு அழிவுள்ள வித்தினாலன்று, அழிவில்லா வித்தினால் கிடைத்தது. உயிருள்ளதும், என்றும் நிலைத்து நிற்பதுமான கடவுளின் வார்த்தையால் பிறந்துள்ளீர்கள்.
அன்புக்குரியவர்களே, நாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்வோமாக. ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது; அன்பு செய்பவன் எவனும் கடவுளிடமிருந்து பிறந்துள்ளான்; அவனே கடவுளை அறிவான்.
புறணிப் பேச்செல்லாம் விலக்குங்கள். புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் போல் கலப்பற்ற ஞானப் பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் வளர்ச்சி பெற்று மீட்படைவீர்கள்.