Topic : Beauty

சடை பின்னுவதும், பொன் நகைகள் அணிவதும், உடை மாற்றுவதுமாகிய வெளி அலங்கரிப்பில் உங்கள் அழகு அமையாமல்,
சாந்தமும் அமைதியுமுள்ள மனப்பான்மையாகிய அழியாத அலங்கரிப்பில் அமையட்டும். அந்த அலங்கரிப்போ மனித உள்ளத்தில் மறைவாயிருப்பதொன்று. அதுவே கடவுள் முன்னிலையில் விலை உயர்ந்தது.

1 Peter 3:3-4

அழகு பொய்யும், எழில் வீணுமாம். ஆண்டவருக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.

Proverbs 31:30

யெருசலேமே எழுந்திரு, எழுந்து ஒளிவீசு, ஏனெனில் உனது ஒளி வந்து விட்டது, ஆண்டவரின் மகிமை உன் மேல் உதித்து விட்டது.

Isaiah 60:1

ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "அவனுடைய முகத்தையும் உடல் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நாம் அவனைத் தள்ளி விட்டோம். மனிதன் பார்க்கிறது ஒருவிதம், நாம் தீர்ப்பிடுவது வேறுவிதம். மனிதன் வெளிக்குத் தோன்றுபவற்றை மட்டும் பார்க்கிறான்; ஆண்டவரோ இதயத்தை பார்க்கிறார்" என்று சொன்னார்.

1 Samuel 16:7

ஏனெனில், நீரே என் உள் உறுப்புகளை உண்டாக்கினீர், என் தாயின் கருவில் என்னை உருவாக்கியவர் நீரே.
இவ்வளவு வியப்புக்குரிய விதமாய் நீர் என்னைப் படைத்ததை நினைத்து நான் உம்மைப் போற்றுகிறேன்; உம்முடைய செயல்கள் அதிசயமுள்ளவை என்று உம்மைப் புகழ்கிறேன்: என்னை முற்றிலும் நீர் நன்கறிவீர்.

Psalms 139:13-14

பெண்டிரும் அடக்க ஒடுக்கத்தோடும் நாணத்தோடும் ஏற்புடைய ஆடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். பின்னல் சடையும், பொன்னும் முத்தும்,ஆடம்பரமான உடைகளும் அல்ல அவர்களுக்கு அணிகலன்.
கடவுள் பற்று உள்ளவர்களெனச் சொல்லிக் கொள்ளும் பெண்களுக்கேற்ப அவர்கள் செய்யும் நந்செயல்களே அவர்களுக்கு அணிகலன்.

1 Timothy 2:9-10

ஆகவே நாங்கள் உள்ளம் தளர்வதில்லை; ஆனால், எங்கள் புறவுடலைச் சார்ந்தது அழிந்த வண்ணமாய் இருந்தாலும், உள் மனம் நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகிறது.

2 Corinthians 4:16

புல் உலர்ந்து போகிறது, பூ உதிர்ந்து போகிறது, நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.

Isaiah 40:8

"ஆதலால் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உயிர்வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலை மூட எதை உடுப்பது என்றோ கவலைப்பட வேண்டாம். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவையல்லவா ?

Matthew 6:25

நாம் செய்ய வேண்டுமென்று கடவுள் முன்னேற்பாடு செய்த நற்செயல்களில் நாம் ஈடுபடுவதற்கே கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் படைக்கப்பட்டோம்.

Ephesians 2:10

இவ்வாறு கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

Genesis 1:27


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |