Topic : Death

அவளிடம் இயேசு, "உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் விசுவாசங்கொள்பவன் இறப்பினும் வாழ்வான்.
உயிர் வாழ்கையில் என்னில் விசுவாசம் கொள்பவன் என்னும் ஒருபோதும் சாகான். இதை விசுவசிக்கிறாயா ?" என்று கேட்டார்.

John 11:25-26

வாழ்ந்தாலும் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம், செத்தாலும் ஆண்டவருக்கென்றே சாகிறோம். ஆகவே வாழ்ந்தாலும் செத்தாலும் நாம் ஆண்டவர்க்கே உரியவர்களாய் இருக்கிறோம்.

Romans 14:8

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், தீமையானதெதற்கும் அஞ்சேன்: ஏனெனில், நீர் என்னோடு இருக்கின்றீர்; உமது கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதலாய் உள்ளன.

Psalms 23:4

ஏனெனில், எனக்கு வாழ்வதென்பது கிறிஸ்துவே; சாவது ஆதாயமே.

Philippians 1:21

அதிதூதரின் குரலொலியும் கடவுளின் எக்காளமும் அடையாளமாக முழங்க, ஆண்டவர் தாமே வானிலிருந்து இறங்கி வருவார். அப்போது கிறிஸ்துவுக்குள் இறந்தோர், முதலில் உயிர்த்தெழவர்.
அதன் பின்னரே உயிரோடு எஞ்சி நிற்கும் நாம் அவர்களோடு கூட ஒன்றாய் மேகங்கள் மீது தூக்கிச் செல்லப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளப் போவோம். போய், ஆண்டவரோடு எப்போதும் இருப்போம்.

1 Thessalonians 4:16-17

ஏனெனில், சாவோ வாழ்வோ, வானதூதரோ தலைமை ஏற்பவரோ, நிகழ்வனவோ வருவனவோ, வலிமை மிக்கவரோ,
வானத்தில் உள்ளவையோ ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்புப் பொருளோ, நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் வெளிப்பட்ட இறை அன்பிலிருந்த நம்மைப் பிரிக்க முடியாது என்பது என் துணிபு.

Romans 8:38-39

நீ என்னை உன் இதயத்தின் மேல் முத்திரையாகவும், கையிலே இலச்சினையாகவும் பொறித்து வை. ஏனெனில் காதல் சாவைப் போல் வலிமையுள்ளது, காதல் வைராக்கியம் பாதாளம் போல் கொடியது; அதன் சுடர்கள் நெரூப்புச் சுடர்கள் போலும்! அதன் கொழுந்து கொடிய தீக்கொழுந்தையொக்கும்!

Song of songs 8:6

ஆதாமில் அனைவரும் இறந்ததுபோல கிறிஸ்துவில் எல்லாரும் உயிர்பெறுவர்.,

1 Corinthians 15:22

இரு பக்கங்களிலும் நெருக்கப்படுகிறேன். உயிர் நீத்து கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒருபுறம். 'இதுவே மிகச் சிறந்தது,
மற்றொருபுறம், இன்னும் உலகில் வாழ்வது உங்கள் பொருட்டுத் தேவையாயிருக்கிறது.

Philippians 1:23-24

பின் அரியணையிலிருந்து ஒரு பெருங் குரலைக் கேட்டேன். அக்குரல், "இதோ, கடவுளின் இல்லம் மனிதரிடையே உள்ளது; அவர்களோடு அவர் குடிகொள்வார். அவர்கள் அவருக்கு மக்களாயிருப்பர்; கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்.
அவர்களுடைய கண்ணீரனைத்தையும் துடைத்துவிடுவார்; இனிச் சாவில்லை, புலம்பலில்லை, அழுகையில்லை, நோவில்லை முன்னிருந்தவை மறைந்து போயின" என்றது.

Revelation 21:3-4

இஸ்ராயேல் வீட்டாரே,நீங்கள் ஏன் சாக வேண்டும்? எவனும் சாக வேண்டும் என நாம் விரும்புவதில்லையே, என்கிறார் ஆண்டவராகிய இறைவன். ஆகவே மனந்திரும்புங்கள்; உயிர் வாழ்வீர்கள்."

Ezekiel 18:32

உண்மையான வார்த்தை இது. 'அவரோடு இறந்தோமானால், அவரோடு வாழ்வோம்.

2 Timothy 2:11

ஏனெனில், தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்.

Matthew 16:25

மனிதன் வழியாய்ச் சாவு உண்டானது போல, மனிதன் வழியாகவே இறந்தோர்க்கு உயிர்த்தெழுதலும் உண்டு.

1 Corinthians 15:21

தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரக்கக் கூவினார். இதைச் சொன்னதும் உயிர்நீத்தார்.

Luke 23:46

நீதிமானுக்காக ஒருவன் தன் உயிரைக்கொடுத்தல் அரிது- ஒருவேளை நல்லவன் ஒருவனுக்காக யாரேனும் தன் உயிரைக் கொடுக்கலாம் - ஆனால் .
நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்; இதனால் கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பை எண்பிக்கிறார்.

Romans 5:7-8

இதோ மனிதர் எல்லாரும் போகிற வழியே நான் இன்று போகிறேன். ஆண்டவர் உங்களுக்குத் தருவோம் என்று அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாவது நிறைவேறாமல் போகவில்லை என்பதை நீங்கள் முழுமனத்தோடு அறிந்துகொள்வீர்கள்.

Joshua 23:14


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |