உடனே அவர் ஆசாவிடம் சென்று அவனை நோக்கி, "ஆசாவே, யூதாவின் புதல்வரே, பென்யமீன் குலத்தினரே கேளுங்கள்: நீங்கள் ஆண்டவரோடு இருக்கும் வரை அவரும் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைப் புறக்கணித்தால், அவரும் உங்களைப் புறக்கணிப்பார்.
இறைவா, என் இறைவா, ஆர்வமுடன் உம்மை நாடுகிறேன்: நீரினின்றி வறண்டு கிடக்கும் நிலம் நீரை நோக்கியிருப்பது போல் என் உள்ளம் உம்மீது வேட்கை கொண்டுள்ளது; என் உடலும் உம்மை ஆசிக்கிறது.
தீமையைத் தேடாதீர்கள்; நன்மையையே நாடுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வது போலவே, சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடிருப்பார்.
முன் நம்மை யார் என விசாரிக்காதவர்கள் நம்மைத் தேட இடங்கொடுத்தோம்; நம்மைத் தேடாதவர்கள் நம்மைக் கண்டுகொள்ள இடங்கொடுத்தோம்; நமது பெயரைக் கூவியழைக்காத மக்களினத்தை நோக்கி, நாம், "இதோ இருக்கிறோம், இதோ இருக்கிறோம்" என்று சொன்னோம்.