Topic : Repentance

நமது நாமத்தினாலே மந்திரிக் கப்பட்ட நமது சனங்கள் மனந்திரும் பிச் செபம் பண்ணி, நமது முகத்தைத் தேடித் தங்கள் அக்கிரமமான வழி களை விட்டுத் தபம் பண்ணினால், அப்பொழுது நாம் பரலோகத்தில் இருந்து அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளி, அவர்கள் பாவங்களை மன்னித்து அவர்களுடைய தேசம் சேமமாயிருக்கச் செய்வோம்.

2 Chronicles 7:14

நம்முடைய பாவங்களை நாம் சங்கீர்த்தனம்பண்ணினால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்துச் சகல அக்கிரமத்திலும் நின்று நம்மைப் பரி சுத்தமாக்குவதற்கு அவர் பிரமாணிக் கமும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

1 John 1:9

தன் பாவங்களை மறைக்கிற வன் வாழவேமாட்டான்; ஆனால் அவைகளைச் சங்கீர்த்தனம் பண்ணி விட்டுவிடுகிறவன் இரக்கத்தைப் பெறுவான்.

Proverbs 28:13

ஆகையால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்படி மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புங்கள்.

Acts 3:19

சிலர் எண்ணுகிறபடி ஆண்டவர் தமது வாக்குத்தத்தை நிறைவேற்றுவதற்குத் தாமதிப்பதில்லை. ஆனாலும் அவர் ஒருவராவது கெட்டுப்போக விரும்பாமல், எல்லாரும் தவத்துக்குத் திரும்பவேண்டுமென்று விரும்பி, உங்களைப்பற்றிப் பொறுமையோடு சகித்து வருகிறார். (எசே. 18:23; 1 தீமோ. 2:4.)

2 Peter 3:9

ஆகையால் தகுதியான தவப் பலனைச் செய்யுங்கள்;

Matthew 3:8

அதன்பின்பு இஸ்ராயேலின் தேவனாகிய கர்த்தருடைய பாஸ்கா வைக் கொண்டாட வேண்டுமென் றும், எருசலேமிலிருக்கிற கர்த்தரு டைய ஆலயத்திற்கு வர வேண்டு மென்றும் எசெக்கியாஸ் இஸ்ராயேல் தேசம் யூதா தேசம் எவ்விடத்தும் ஆட்களை அனுப்பினதும் தவிர எப்பிராயீம் மனாசே கோத்திரர் களுக்கும் நிருபங்களை எழுதி அனுப் பினான்.
இராசாவும் பிரபுக்களும் சபை யார் யாவரும் பெரிய சங்கமாகக்கூடி ஆலோசனை பண்ணினார்கள். அந்தச் சங்கத்திலே பாஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணி னார்கள்.
உள்ளபடி அந்தப் பண்டிகை யைக் கொண்டாட வேண்டிய திட்டமான காலத்தில் ஜனங்கள் அதை ஆசரிக்கக்கூடாமல் போயிற்று. காரணம்: ஊழியம் பண்ணத்தக்க ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தப் படுத்தினதுமில்லை, ஜனங்கள் எருச லேமில் இன்னும் கூடி வந்ததுமில் லையாம்.
மேற்சொல்லிய தீர்மானம் இராசாவின் பார்வைக்கு சமஸ்த சபையார் பார்வைக்கும் நியாயமாம் என்று காணப்பட்டது.
அவர்கள் இன்னொரு காரியத் தைத் தீர்த்துப் போட்டார்கள்; அது என்னவெனில்: இஸ்ராயேலின் தேவ னாகிய கர்த்தருடைய பாஸ்காவை எருசலேமில்தானே ஜனங்கள் வந்து கொண்டாட வேண்டுமென்று சொல் லிப் பெற்சபே முதல் தான் வரைக்கு முள்ள இஸ்ராயேல் தேசமெங்கும் ஆட்களை அனுப்பும்படி திட்டம் பண்ணினார்கள்; காரணம்; கற்ப னையை மீறி வெகு வெகு பேர்கள் (வெகு காலமாய்) பாஸ்காவை ஆசரிக்கவில்லை என்பதாம்.
அப்படியே இராசாவும் பிரபுக் களும் கொடுத்த தாக்கீதை அஞ்சல் காரர் வாங்கி, இஸ்ராயேல் தேசம் யூதா சேம் எவ்விடத்தும் போய் இராசா கட்டளையிட்ட பிரகாரம் பறைசாற்றி: இஸ்ராயேல் புத்திரரே! அபிரகாம், ஈசாக்கு, இஸ்ராயேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த் தரிடத்திற்குத் திரும்புங்கள்; திரும்பி னால் அசீரியருடைய இராசாக்களின் கைக்குத் தப்பிப் பிழைத்த உங்க ளுக்கு அவர் துணையாயிருக்கத் திரும்புவார்.
உங்கள் பிதாக்களும் உங்கள் சகோதரர்களும் தங்கள் பிதாக்களும் உங்கள் சகோதரர்களும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டபடியால் அன்றோ அவர் அவர்களை மரணத்திற்கு ஒப்பு வித்தார்; அது உங்களுக்குத் தெரிந்த காரியம்தானே. நீங்கள் அவர்களைப் போல நடவாதேயுங்கள்.
உங்கள் பிதாக்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தினார் களே, நீங்கள் அந்தப்படி செய்யாமல் கர்த்தரோடு உடன்பட்டு அவர் என் றைக்கும் பரிசுத்தமாக்கின அவரு டைய திரு ஸ்தலத்திற்குத் திரும்பி வந்து உங்கள் பிதாக்களின் தேவனா கிய அவருக்கு நல்ல ஊழியம் பண்ணு வீர்களேயாகில், கர்த்தருடைய உக்கி ரமமான கோபமானது உங்களை விட்டு அகன்றுபோம்.
ஆம்! கர்த்தரிடத்திற்குத் திரும் பினால் உங்கள் சகோதரரும், உங்கள் குமாரரும் தங்களைச் சிறைப்பிடித் துக்கொண்டுபோன எஜமான்களுக்கு முன்பாக இரக்கம் பெற்று இந்தத் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள். உள்ளபடி கிருபை தயாபமுள்ளவரா யிருக்கிறார் உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அவரிடத்திற்குத் திரும்புவீர்களானால், அவரும் பாரா முகமாயிருக்கப் போகிறதில்லை என்று சொல்லி விளம்பரம் பண்ணி னார்கள்.
அஞ்சற்காரர் அவ்விதமே போய் எப்பீராயீம் தேசத்திலும், மனாசே தேசத்திலும், சபுலோன் தேசத்திலும் ஊர் ஊராகச் சீக்கிர மாய்த் திரிந்திருக்கையில் அத்தேசங் களிலிருந்த ஜனங்கள் அவர்களைத் திட்டியும் ஏசியும் பரிகாசம் பண்ணி னார்கள்.
ஆனாலும் ஆசரிலும், மனா சேயிலும், சபுலோனிலும் சிற்சில குடிகள் அஞ்சற்காரர் சொல்லைக் கேட்டு எருசலேமுக்கு வந்தார்கள்.
யூதாவிலேயோ கர்த்தருடைய கரமானது ஜனங்களை ஒருமனமா யிருக்கச் செய்தது. ஆனபடியால் அவர்கள் கர்த்தருடைய சித்தத்திற்கு அடங்கினவர்களாய் இராசாவும் பிரபுக்களும் கட்டளையிட்ட பிரகாரமே செய்துவந்தார்கள்.
அப்படியிருக்க, வெகு வெகு ஜனங்கள் எருசலேமுக்கு வந்து இரண் டாம் மாதத்திலே புளிப்பில்லாத அப்பப் பண்டிகையை ஆசரித்தார் கள்.
பின்பு அவர்கள் எழுந்து, எருச லேமிலுண்டான (மற்றுமுள்ள) பலி பீடங்களையும், விக்கிரகங்களுக்குத் தூபங் காட்டும் நானாவித தூபக் கலசங்களையும் அழித்துக் கெதிரோன் ஆற்றிலே எறிந்து போட்டார்கள்.
இப்படி இரண்டாம் மாதம் பதினாலாம் தேதியிலே பாஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள். பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர் களும், லேவியர்களும் கர்த்தருடைய ஆலயத்தில் சர்வாங்கத் தகனப் பலிகளையும், செலுத்தி வந்தார்கள்.
அவர்கள் தேவனுடைய மனுஷனாகிய மோயீசனின் நியாயப் பிரமாணத்திற்கேற்ற விதமாய்த் தங்கள் முறைமையின்படியே தம் தம் ஸ்தானத்தில் நின்றார்கள். குருக்களோ லேவியர்களின் கையிலிருந்து இரத் தத்தை வாங்கித் தெளித்தார்கள்.
சபையிலே மிகுதியான ஜனங் கள் தீட்டுப்பட்டிருந்தார்கள். ஆனது பற்றித் தங்களைப் பரிசுத்தப்படுத்தா திருந்தவர்களுக்காக லேவியர்கள் பாஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்து வந்தார்கள்.
ஆனது பற்றி எப்பிராயீம், மனாசே, இசாக்கார், சபுலோன் கோத்திரத்தாரில் மிகுதியான பேர் கள் இனனும் தீட்டுப்பட்டிருந்த போதிலும் பாஸ்காவைத் தின்றார் கள். அது எழுதியிருக்கிற நியாயப் பிரமாணத்திற்கு விரோதமாயிருந் தது வாஸ்தவம். ஆனால் எசெக்கி யாஸ் அவர்களுக்காகக் கர்த்தரிடம வேண்டிக்கொண்டு: கர்த்தர் நல்லவ ராயிருக்கிறபடியால்,
எவர்கள் முழு மனதோடு தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடி வருகிறார்களோ அவர்களுக்கு அவர் தயவுபண்ணு வார். அவர்கள் சுத்தாங்கம் அடையா திருந்தபோதிலும் அவர் அதைக் குற்றமாகப் பாராட்டாமல் மன்னிப் பாரென்று சொன்னான்.
கர்த்தர் எசேக்கியாஸுடைய விண்ணப்பத்தை அங்கீகரித்து ஜனங் களின் மேல் கோபங்கொள்ள வில்லை.
அப்படியே எருசலேமிலே இருந்த இஸ்ராயேல் புத்திரர் புளிப் பில்லாத அப்பப் பண்டிகையை ஏழு நாளளவும் மகா ஆனந்தத்தோடு ஆடம்பரமாகக் கொண்டாடினார் கள். லேவியர்களும் ஆசாரியர்களும் தம் தம் ஊழியத்திற்கேற்ற தேவ வாத்தியங்களை வாசித்து எம்மேரை யாய்க் கர்த்தரை ஸ்துதித்து வந்தார் களோ, அவர்களுக்கு அம்மேரை யாகவே செய்தார்கள்.
கர்த்தருக்கடுத்த காரியங் களை உத்தம விதமாய்க் கண்டுணரும் சகல லேவியர்களோடு எசேக்கியாஸ் பட்சமாய்ப் பேசினான். ஆனதுபற்றி அவர்கள் பண்டிகையின் ஏழு நாளள வும் புசித்துச் சமாதானப் பலி மிருகங் களைப் பலியிட்டுத் தங்கள் பிதாக் களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரம் பண்ணிவந்தார்கள்.
பின்பு ஜனங்கள் எல்லாரும் வேறு ஏழு நாளளவும் கொண்டாட் டம் பண்ணலாமென்று யோசனை பண்ணி அவ்விதமே மற்ற ஏழு நாள் திருவிழாவையும் ஆனந்தத்தோடு கொண்டாடினார்கள்.
உள்ளபடி யூதாவின் இராசா வாகிய எசேக்கியாஸ் சபைக்கு ஆயிரம் காளைகளையும், ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்திருந்தான். அதுவுமல்லாமல் பிரபுக்களும் ஜனங் களுக்கு ஆயிரம் காளைகளையும், பதினாயிரம் ஆடுகளையும் கொடுத் திருந்தார்கள். ஆனதுபற்றி ஆசாரிய ரில் வெகுவெகுபேர்கள் தங்களைச் சுத்தம்பண்ணினார்கள்.
யூதாவின் சபை அனைத்தும் ஆசாரியரும் லேவியரும் இஸ்ராயே லிலிருந்து வந்த ஜனங்கள் அனை வரும் யூதாவிலும் இஸ்ராயேலிலும் குடியிருந்து யூதர்களுடைய வேதத் தைப் பற்றிக் கொண்டிருந்த அந்நியர் களும் சந்தோஷ சாகரத்தில் அமிழ்ந் திருந்தார்கள்.
அப்படியே எருசலேமில் கொண்டாடப்பட்ட திருவிழா மகா சிறப்பாயிருந்தது. இஸ்ராயேலின் இராசாவாகிய தாவீதின் குமார னாகிய சலொமோனுடைய நாட்கள் துவக்கி அப்படிப்பட்ட ஆடம்பர மான சடங்குகள் நடந்ததில்லை.
கடைசியிலே ஆசாரியர்களும் லேவியர்களும் எழுந்து நின்று ஜனக் கும்பலை ஆசீர்வதித்தார்கள். அவர் களுடைய விண்ணப்பம் பரலோக மென்கிற திருஸ்தல மட்டும் எட்டிற்று.

2 Chronicles 30:9b

பலியையல்ல, தயாளத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தென்ன வென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நீதிமான்களையல்ல, பாவி களையே அழைக்க வந்தேன் என்றார். (ஓசே. 6:6; மத். 12:7; 1 தீமோ . 1:15.)

Matthew 9:13

அது முதல் சேசுநாதர், தவஞ் செய்யுங்கள், ஏனெனில் மோட்ச இராச்சியம் சமீபித்திருக்கிறதென்று பிரசங்கிக்கத் தொடங்கினார். (மாற். 1:15.)

Matthew 4:17

சர்வேசுரனை அண்டிப்போங்கள்; அவரும் உங்களை அண்டிவருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள். இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். (இசை. 1:16.)

James 4:8

உங்கள் வஸ்திரங்களை (மாத்திரம்) அல்ல; உங்கள் இருதயங் களையும் (மனஸ்தாபத்தால்) கிழித்து, உங்கள் தேவனாகிய ஆண்டவரிடந் திரும்புங்கள்; ஏனெனில், அவர் நல்ல வர், இரக்கமுள்ளவர், பொறுமை யுள்ளவர், மிகுந்த தயையுடையவர், தீமைமீது பச்சாத்தாபங் கொள்பவர் (சங். 85:5).

Joel 2:13

நான் நேசிக்கிறவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன். ஆகையால் நீ உரோசமடைந்து தவஞ்செய். (பழ. 3:12; எபி. 12:6.)

Revelation 3:19

ஏனெனில், செத்தவனுடைய சாவை நாம் விரும்புகிறதில்லை யென்று தேவனாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; ஆகையால் மனந் திரும்புங்கள், (அதனால்) பிழைத் திருப்பீர்கள் (எசேக். 33:11; 2 இரா. 3:9).

Ezekiel 18:32

அவ்விதமே தவஞ்செய்ய அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப்பற்றி உண்டாகிற சந்தோஷத்தைவிட, தவஞ்செய்கிற ஒரு பாவியி னிமித்தம் மோட்சத்திலே அதிக சந் தோஷமுண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். * 7. மனந்திரும்ப அவசியமில்லாத நீதிமான்கள்பேரில் சர்வேசுரன் குறையற்ற பட்சமாயிருந்தாலும் மனந்திரும்புகிற பாவி அவருடைய சந்தோஷத்துக்கு ஒரு விசேஷ காரணமாயிருக்கிறானென்று இவ்வாக்கியத்தால் விளங்குகிறது.

Luke 15:7

இராயப்பர் அவர்களை நோக்கி : நீங்கள் தவஞ்செய்து, உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக உங்களில் ஒவ்வொருவனும் சேசுக்கிறீஸ்துநாதரு டைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறக்கடவான்; அப்பொழுது இஸ்பி ரீத்துசாந்துவின் வரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.

Acts 2:38

ஆகிலும் இந்த அறியாமையின் காலங்களைச் சர்வேசுரன் பாராமுகமாய்ப் பார்த்து, இப்போது எங்கும் எல்லா மனிதரும் தவஞ்செய்யும் படிக்கு அறிவிக்கிறார்.

Acts 17:30

காலம் நிறைவேறி, சர்வேசுர னுடைய இராச்சியம் சமீபமாயிற்று. பச்சாத்தாபப்பட்டுச் சுவிசேஷத்தை விசுவசியுங்கள் என்றார்.

Mark 1:15

தாரியூஸ் அரசனின் இரண் டாம் வருஷம், எட்டாம் மாதம், அத்தோ குமாரன் பராக்கி, இவர் புத்திரன் சக்காரியாசெனுந் தீர்க்க தரிசியருக்கு அருளப்பட்ட ஆண்ட வரின் வாக்கியமாவது:
ஆண்டவர் உங்கள் பிதாக்கள் மீது கடுங்கோபச் சன்னதத்தின ராயினர்.
நீ (அவர்கள் மக்களாகிய) அவர்களைப் பார்த்து: சேனைகளின் தேவனார் சொல்வதேதெனில்: நம் மிடம் (மனந்திரும்பி) வாருங்கள் என்கிறார் சேனைகளின் அதிபர்; யாமும் உங்களை நோக்கி வருவோம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர் (இசா.21:12; 31:6; 45:22; எரே. 3:12; எசேக். 18:30; 20:7; 33:11; ஓசே. 14:2; யோவேல். 2:12; மலாக். 3:7).
முந்திய தீர்க்கதரிசியர் உங்கள் பிதாக்களை நோக்கி: “இதோ சேனை களின் ஆண்டவர் வாக்கியம்: உங்க ளது கெட்ட வழிகளையும், துர் எண் ணங்களையும் (விட்டு மனந்)திரும் புங்கள்” என ஓதியும் அவர்கள் செவி கொடுத்தார்களில்லை; அவர்களைப் போல் நீங்களும் இராதீர்கள் என்கி றார் ஆண்டவர்.
உங்கள் பிதாக்கள் எங்கே? தீர்க்கவசனரும், அனவரதமாய்ச் சீவிப்பாராமோ?
நமது அடியார்களாகிய தீர்க்க வசனர்களுக்கு நாம் ஆக்கியாபித் தருளிய எச்சரிப்புகளும், வாக்கியங் களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? உள்ளபடி அவர்கள் மனந்திரும்பி சேனைகளின் தேவனார் எங்களை எங்கள் வழிப் பாடுகட்கும், கைங்கிரியாதிகட்கும் இணங்கவே நடத்தத் திருவுளம் வைத்ததுபோல் எங்களை நடத்தி னார் எனச் சாற்றினர்களன்றோ எனச் சொல்வாயாக (என்றார் ஆண்டவர்.)
தாரியூஸ் அரசனின் இரண் டாம் வருடம், பதினொன்றாம் மாதம், இருபத்துநான்காந் தேதியில் அத்தோ புத்திரர் பராக்கியா என்போ ரது குமாரனாகிய சக்காரியாவுக்குத் தேவ வாக்கியம் இங்ஙனம் அருளப் படலானது.
யான் கபில நிறத்த அசுவ வாகனா ருடனான ஸ்ரீமான் ஒருவரை இர வின் காட்சி கண்டேன்; அன்னவர் பாதாளத்தாவில் (நடப்பட்டி)ருந்த மீர்த்து செடிகள் நடுவில் நின்றார்; அவர் பின் பொன்னிறத்தும், வெண் ணிறத்தும், பலவண்ணத்துமான அசுவங்களு(மிருந்தன.)
அப்போது யான்: என் ஐயனே! இவர்கள் யாரே என்றேன்; என் னிடஞ் சம்பாஷிப்பவராய் (எனக் குள் தோன்றிய வானவர் என்னை நோக்கி: அஃது யாதென உனக்கு யான் விளக்குவேன் என்றார்.
மீர்த்து செடிகள் நடுவீற்றிய ஸ்ரீமான் விடையாக: இவர்கள் பூதலத்தைச் சுற்றிப் பார்க்க ஆண்டவ ரால் அனுப்பப்பட்டவர்களேயாம் என்றார்.
இவர்கள் மீர்த்து செடிகள் நடு வீற்றிய தேவதூதரைப் பார்த்து: பூதலத்தை யாங்கள் சுற்றி வந்தோம்; பார் அனைத்தும் வசிக்கப்பெற்று, அமைதி வாய்த்திருக்கின்றதென மொழிந்தனர்.
தேவதூதர் வாய் மலர்ந்து, சேனைகளின் தேவனே! நீர் கோபங் பாராட்டும் (இந்த எருசலேம்மீதும், யூதா பட்டணங்கள் மீதும் எத்துணை காலங் கனிகரங் கொள்ளாதிருப்பீர்? எழுபதாம் வருடமுமாகின்றதே என் றார்.
என்னிடமாய்ப் பேசி நின்ற வானவரை ஆண்டவர் நோக்கி: இன் சொற்களும், ஆறுதல் மொழிகளுமா யருளினார்.
என்னிடமாய்ச் சம்பாஷித்த வானவர் என்னைப் பார்த்து: நீ உரத்த சப்தமாக: இதோ சேனைகளின் தேவன் அருள்வது: எருசலேமீதும் சீயோன்மீதும் மிகுந்த வைராக்கிய ஆற்றலுடைத்திருக்கின்றோம் (சக். 8:2).
வல்லுனரான (புறச்சாதி) சனங்கள் மீது பெரிதுங் கோபதாபங் கொண்டோம்; ஏனெனில், (நம் பிரசைமீது) யாம் சிறிதளவே சினந் திருக்க, அவர்களோ மிதங்கடந்த தின்மைசெய்தனர்.
ஆதலின் ஆண்டவர் அருள் வதேதெனில்: கனிகர (உளத்தினராய்) யாம் எருசலேமுக்குத் திரும்பி வரு வோம்; அங்கு (மீண்டும்) நமதால யஞ் சமைக்கப்படும்; எருசலேம் மீது நூலளவு செய்யப்படும் என்கிறார் சேனைகளின் தேவனார் எனச் சொல் வாயாக.
இன்னொருவிசை நீ குரல் எழுப்பி: இதோ சேனைகளின் நாயகர் செப்புவது: நமது நகர்கள் மீண்டும் நன்மை மிகுவன; இன்னஞ் சீயோனை ஆண்டவர் தேற்றுவார்; எருசலேமை மறுபடியும் (தம் வாச ஸ்தானமாய்த் தெரிந்து கொள்வார் எனக் கூறுவாயாக என்றார்.
பின்னும் யான் கண்ணை ஏறெடுத்து நோக்க: எதிரில் நாலு கொம்புகளைக் கண்டேன்.
என்னிடமாய்ச் சம்பாஷித் திலங்கிய வானவரை நோக்கி: இவை என்ன எனக் கேட்க, அவர்: இவை யூதாவையும், இஸ்ராயேலையும், எருசலேமையுஞ் சிதறடித்த கொம்பு களாகும் என்றார்.
மீண்டும் ஆண்டவர் எனக்கு நான்கு தொழிலாளிகளைக் காட்டி னார்.
அப்போது யான்: இவர்கள் என் செய்ய வந்தவர்கள் எனக் கேட் டேன்; அவர் அதற்கு: ஒருவனுஞ் சிரந்தூக்காவண்ணம் யூதா மாந்தர் களனைவரையுஞ் சிதறடித்த கொம்பு கள் இவைகளேயாம்; இவர்களோ யூதாவைக் கலங்கவடிக்கும் பொருட்டு அதின்மீது கொடுங் கோல் செலுத்திய சனங்களுடைய (வல்லபமாகிய) கொம்புகளை முறித்து அவர்களைக் கிடுகிடாய்க் கச் செய்ய வந்தவர்களாவர் என்றார்.

Zechariah 1:3b

நீதிமான்களையல்ல, பாவிக ளையே பச்சாத்தாபத்துக்கு அழைக்க வந்தேன் என்றார்.

Luke 5:32

அவ்விதமே தவஞ்செய்கிற ஒரு பாவியினிமித்தம் தேவதூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கு மென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். * 10. மோட்சவாசிகளுக்கும், இவ்வுலகத்திலுள்ள கிறீஸ்துவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்றும், ஆகையால் அவர்களை நோக்கி மன்றாடுகிறது வீணென்றும் போதிக்கிறவர்களை இந்த வாக்கியம் மறுக்கிறது.

Luke 15:10


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |