என்மட்டில் நீங்கள் சமாதானத்தைக் கொண்டிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். இவ்வுலகத்தில் உங்களுக்கு நெருக்கிடை உண்டாகும்; ஆயினும் திடமாயிருங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் என்று திருவுளம்பற்றினார். (அரு. 14:27.)
ஆதலால் திரண்ட மேகம் போன்ற இம்மாத்திரம் சாட்சிகள் நம் மைச் சூழ்ந்திருக்க, நாம் எல்லாப் பாரத் தையும் நமதுமேல் சுமந்த பாவத்தையும் தள்ளிவிட்டு, (உரோ. 6:4.)
மன அடக்கமும், விழிப்பும் உள்ள வர்களாயிருங்கள். ஏனெனில் உங்கள் சத்துருவாகிய பசாசு கர்ச்சிக்கிற சிங் கத்தைப்போல் யாரை விழுங்கலா மோவென்று தேடி, சுற்றித்திரிகிறது.
விசுவாசத்தின் நல்ல போர் பொருதுவீராக; நித்திய ஜீவியத்தைக் கைப்பற்றிக்கொள்ளும். இதற்காக வே நீர் அழைக்கப்பட்டீர். இதைப் பற்றியே அநேக சாட்சிகளுக்கு முன் பாக விசுவாசத்தின் நல்லறிக்கையிட் டிருக்கிறீர்.
பிள்ளைகளே, நீங்கள் சர்வேசுரனால் உண்டாயிருக்கிறீர்கள். உங்களுக் குள் இருக்கிறவர் உலகத்திலிருக்கிறவ னைவிடப் பெரியவராய் இருக்கிறபடி யால், நீங்கள் அவனை ஜெயித்தீர்கள்.
நான் ஜெயங்கொண்டு என் பிதாவோடேகூட அவருடைய சிங்கா சனத்தில் உட்கார்ந்திருக்கிறது போல், ஜெயங்கொள்ளுகிற எவனும் என் னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அவனுக்கு அருளுவேன்.