பின்பு அவர் அவர்களைப் பார்த்து திருவுளம்பற்றினதாவது: எவ்வித பொருளாசையின் மட்டிலும் எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்குள்ள ஆஸ்தியின் பெருக்கத்தில் அவனுடைய உயிர் நிற்கிறதில்லை என்றார்.
பூலோகத்தில் உங்களுக்குப் பொக் கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே அந்தும் துருவும் அரிக்கின்றது, திருடருங் கன்னமிட்டுத் திருடுகிறார்கள்.
* 19. பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்:- என்பதினால் இலெளகீக பொருட்களின்மேல் மிதமிஞ்சின பற்றுதல் விலக்கப்பட்டிருக்கிறது. (21-ம் வசனம் காண்க.) எனெனில் மிதமிஞ்சின பற்றுதலால் இருதயஞ் சர்வேசுரனை மறந்து இந்த உலக வாழ்வை மாத்திரம் அபேட்சிக்கும். ஆனால் பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். அங்கே அந்தும்துருவும் அரிக்கிறதுமில்லை. திருடர் அங்கே கன்னமிட்டுத் திருடுகி றதுமில்லை , (லூக். 12:33; 1 தீமோ . 6:19.)
ஏனெனில், பொருளாசை எல்லாத் தின்மைகளுக்கும் வேராயிருக்கிறது. சிலர் அப்படிப்பட்ட இச்சைக்கு இடங்கொடுத்து, விசுவாசத்தினின்று தவறி, பற்பல துன்பங்களில் சிக்கிக்கொண்டார்கள்.
எவனானாலும் இரண்டு எஜ மான்களுக்கு ஊழியஞ் செய்யக் கூடாது. ஏனெனில் ஒருவனைப் பகைத்து, மற் றொருவனை நேசிப்பான், அல்லது ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றொரு வனைப் புறக்கணிப்பான். சர்வேசுரனுக் குந் திரவியத்திற்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. (லூக். 16:13.)
* 24. திரவியத்துக்கும்:- என்னும் இந்த வார்த்தை மூல பாஷையில் மாம்மோன் என்றிருக்கிறது. அதற்குச் சீரிய பாஷையில் திரவியமென்றர்த்தமாம்.
மேலும் அர்ச்சிக்கப்பட்டவர்களுக்கு யோக்கியமானபடி எவ்வித வேசித்தனமும், அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது. (கொலோ. 3:5.)