Topic : God

உன் தேவனாகிய ஆண்டவர் வல்லுனராய் உன் நடு வீற்றிருப்பார், அவரே உன்னை இரட்சிப்பார்; உன் னைக் குறித்துச் சந்தோஷ பூரிப்புக் கொள்வார்; தமது அன்பில் நிலைத் திருப்பார், உன்னைக் குறித்துப் புகழ்கூறி மகிழ்வார் (என்பார்கள்).

Zephaniah 3:17

பலங்கொண்டு திடமனதா யிருவென்று இதோ நாம் உனக்குக் கற்பிக்கிறோம். திகைக்கவும் மதி கலங்கவும் வேண்டாம். ஏனென் றால் நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருப்பார் என்றருளினார்.

Joshua 1:9


ஆயினும் உன் தேவனாகிய கர்த் தரை நீ அங்கே தேடுவாய். அவரை உன் முழு இருதயத்தோடும் சஞ்சலம் நிறைந்த ஆத்துமத்தோடும் தேடி விரும்புவாயானால் அவர் உனக்கு அகப்படுவார்.

Deuteronomy 4:29

மகா உந்நதமான கடவுளும், எனக்கு நன்மை புரிந்த தேவனு மானவரை நோக்கி நான் அபய சத்த மிடுவேன்.

Psalms 56:3

ஏனெனில், உன் கரத்தைப் பற்றிக்கொண்டு; ""நீ அஞ்சாதே; நாமே உனக்குத் துணையாயிருப் போம்'' எனப் புகலும் உன் தேவனான ஆண்டவர் நாமே.

Isaiah 41:13

ஆண்டவரே, நீர் என் தேவ னாயிருக்கின்றீர்; உம்மை மகிமைப் படுத்தி உமது நாமகரணத்தைப் போற்றுவேனாக; ஏனெனில், அதிசய உத்தமமானவைகளைச் செய்தீர்; நித்திய கோரிக்கைகளை ஸ்திரப் படுத்தினீர்; அங்ஙனமேயாகக் கடவது.

Isaiah 25:1

நான் (என் பாவங்களை) வெளிப்படுத்தாமல் மவுனமாயிருந்த நாளெல்லாங் கூக்குரலிட்டதினால் என் எலும்புகள் தளர்ந்துபோயிற்று.

Psalms 31:3

ஆகையால் சர்வேசுரன் நம்மை முந்திச் சிநேகித்தபடியினாலே நாமும் அவரைச் சிநேகிப்போமாக.

1 John 4:19

என்னைப் பலப்படுத்துகிறவரைக்கொண்டு என்னால் எல்லாங்கூடும்.

Philippians 4:13

சர்வேசுரன் நமதுமேல் வைத்திருக்கிற நேசத்தை நாம் அறிந்து, விசுவசித்திருக்கிறோம். சர்வேசுரன் சிநேகமாகவே இருக்கிறார். சிநேகத்தில் நிலைத்திருக்கிறவன் சர்வேசுரனிடத் தில் நிலைத்திருக்கிறான்; சர்வேசுரனும் அவனிடத்தில் நிலைத்திருக்கிறார்.

1 John 4:16

ஆகையால், ஓ, தேவனாகிய கர்த்தாவே நீர் மகத்தானவரென்று எவராலும் பாராட்டப்பட்டிருக்கிறீர்; நாங்கள் காதினாலே கேட்ட சகல வார்த்தைகளின்படியன்றோ தேவரீ ருக்கு நிகரானவர் ஒருவருமில்லை என்றும், தேவரீரைத் தவிர வேறு தேவ னுமில்லையென்றும் அறிந்திருக் கிறோம்.

2 Samuel 7:22

எப்படியெனில் எந்த வீடும் ஒருவனால் கட்டப்படும்; அப்படியே எல்லாவற்றையும் உண்டாக்கினவர் சர்வேசுரன்.

Hebrews 3:4

அவனறியாத கண்ணியில் அவன் மாட்டிக்கொள்ளக்கடவான்; அவன் மறைவாய் வைத்த வலையில் அவனே பிடிக்கப்படக்கடவான்; அவன் (வைத்த) வலையில் அவனே விழக்கடவான்.

Psalms 34:8

எருசலேமே! எழுத்திரு; உன் தீபம் வந்ததாலும், ஆண்டவருடைய மகிமை உன்பேரில் உதயமானதாலும், பிரகாச மயமாய் விளங்குவாயாக.

Isaiah 60:1

மோசம்போகாதேயுங்கள். சர்வேசுரன் நகைக்கப்படுகிறவரல்ல.

Galatians 6:7

சர்வேசுரனைச் சிநேகிக்கிறேன் என்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். ஏனெனில், தான் கண்ணால் காண்கிற சகோதரனைச் சிநேகியாதவன், தான் காணாத சர்வேசுரனை எப்படிச் சிநேகிக்கக்கூடும்?

1 John 4:20

என்னைக் கண்டுபிடித்திருப் பவனெவனோ அவன் சீவியத்தைக் கண்டுபிடிப்பான்; ஆண்டவரிடத்தில் இரட்சிப்பையும் பெற்றுக்கொள் வான்.

Proverbs 8:35

நம்முடைய எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் போன்றதன்று; நம்முடைய வழிப்பாடுகள் உங்கள் வழிகளை ஒத்ததன்று என ஆண்டவர் சொல்லுகின்றார்.

Isaiah 55:8

சர்வேசுரனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவரொருவரைச் சிநேகித்தால், சர்வேசுரன் நம்முள் நிலைத்திருக்கிறார். அவருடைய பரம அன்பும் நம்மில் உத்தமமாயிருக்கின்றது. (அரு. 1:18; 1 தீமோ. 6:16.) *** 12. சர்வேசுரனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. இவ்வுலகத்தில் அநேகர் சர்வேசுரனைக் கண்டதாக வேதத்தில் எழுதப்பட்டிருப்பது மெய்யே. ஆனாலும் அர்ச். சின்னப்பர் 1 கொரி. 13-ம் அதி. 12-ம் வசனத்தில் சொல்லியிருக்கிறபடியே: கண்ணாடியில் கண்டதுபோல அவரைத் தரிசித்தார்களேயன்றி, அவருடைய சுபாவ சொரூபத்தில் ஒருவரும் கண்டதில்லை.

1 John 4:12

ஆண்டவரைப் போலப் பரிசுத் தர் இல்லை; உம்மையன்றி வேறொரு வருமில்லை; நமது கடவுளுக்கொத்த வல்லமையுள்ளவருமில்லை.

1 Samuel 2:2

ஆண்டவர் சமுகத்தில் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்; அவர் உங்களை உயர்த்துவார். ( 1 இரா. 5:6: லூக். 14:11, 18:14.)

James 4:10

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கப்போகிற பூமியிலே நீ நெடுநாள் ஜீவிக்கும்பொருட்டு உன் தந்தையையும் தாயையும் சங்கித்திருப்பாயாக.

Exodus 20:12

உமது சந்நிதியில் நின்று எனக்கு ஞாயத் தீர்ப்பு வருவதற்கு உமது விழிகள் சரியானவைகளைப் பார்ப் பதாக.

Psalms 16:2

ஆண்டவரிடத்தில் எப்போதும் சந்தோஷமாயிருங்கள்; மறுபடியுஞ் சொல்லுகிறேன்: சந்தோஷமாயிருங்கள்.

Philippians 4:4


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |