அல்லாமலும் அவர்கள் ஒரே மனதாய் அநுதினமும் தேவாலயத்தில் நிலைத்து வீடுவீடாய், அப்பமும்பகிர்ந்து, ஆனந்த அக்களிப்போடும், கபடில்லாத இருதயத்தோடும் போசனம் பண்ணி,
சர்வேசுரனை ஸ்துதித்து, சகல ஜனங்களுக்கும் பிரியமுள்ளவர்களாயிருப்பார்கள். ஆண்டவரோவெனில் இரட்சிக்கப்படத்தக்கவர்களை அநுதினமும் அந்தச் சபையில் அதிகரிக்கப் பண்ணிவருவார்.
*** 46-47. அப்பொழுது புதுக்கிறீஸ்துவர்களுக்குச் சொந்தமான கோவில்களில்லாமையாலும், யூதருடைய விரோதத்தைப்பற்றியும் திருச்சபையிலுட்பட்டவர்கள் திவ்விய பூசை காணவும், தேவநற்கருணை வாங்கவும் ஏகமாய் ஓரிடத்தில் கூடிவரக் கூடாதிருந்ததைப்பற்றி, அங்கங்கே வெவ்வேறு வீடுகளில் கூடி, அந்த ஞானக்கிருத்தியங்களையும் நிறைவேற்றி அந்நியோந்நிய சிநேகத்தின் அடையாளமாகப் பொதுவில் விருந்து உண்பார்களென்பதே கருத்து.
Acts 2:46-47