ஆண்டவரை நம்புகிறவனோ ஆசீர்வதிக்கப்பட்டவன்; ஆண்டவர் அவனுடைய நம்பிக்கை. அவன் நீர் அருகில் நடப்பட்ட விருட்சத்திற்குச் சமம்; அது நயப்பில் வேரூன்றி இருக்கின்றமையால் உஷ்ண காலத்தில் அதற்குப் பயமில்லை; அதன் இலைகள் பசுமையோடிருக் கும்; வறட்சிகாலத்தில் அதற்குக்
கவலையில்லை; அது ஒருக்காலுங் கனிகொடாதிருக்காது (சங். 1:3).
ஏனெனில் நாம் உங்கள் விஷய மாய் எண்ணும் எண்ணங்கள் நமக் குத் தெரியும்; அவைகள் உங்களுக் குப் பொறுமையையும், முடிவையுந் தரும்பொருட்டு நாம் கொண்ட
சமாதான எண்ணங்களே தவிர துன்ப எண்ணங்களல்ல.
உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் சேவித்து வந்தால் நீங்கள் புசிக்கும் அப்பத்துக்கும் குடிக்கும் தண்ணீருக்கும் நாம் ஆசீர்வாதங் கொடுத்து வியாதியை உங்களிடத்திலிருந்து விலகப்பண்ணுவோம்.
நீ பிழைத்துப் பெருகும்படிக் கும் நீ சுதந்தரிக்கப் போகிற தேசத் தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும் நீ அவரிடத் தில் அன்புகூரவும், அவருடைய வழி களில் நடக்கவும் அவருடைய கற்பனைகளையும் கட்டளை களையும், ரீதி ஆச்சாரங்களையும் கைக்கொண்டு அநுசரிக்கவும் கடவாய்.
பூமியும், அதிலடங்கிய சகல மும், பூமண்டலத்தின் சக்கரமும், அதில் வாழுஞ் சகலருந் தேவனுக்குச் சொந்தம். ஏனெனில், அவரே சமுத்திரங் களுக்கு மேலே அதற்கு அஸ்திவாரம் போட்டு நதிகளுக்கு மேலே அதை ஸ்தாபித்திருக்கிறார்.
ஆனால் உன் தேவனாகிய கர்த்தருடைய குரல் சப்தத்திற்கு நீ செவிகொடுத்து நான் இன்று உனக் குக் கற்பிக்கிற அவருடைய கட்டளை களில் யாவையுங் கைக்கொண்டு ஆசரிப்பாயாகில், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதி களைப் பார்க்கிலும் உன்னை மேன் மைப்படுத்துவார்.
பத்தில் பாகங்களெல்லாம் (நமது) களஞ்சியஞ் சேருங்கள்; அது நமது வீட்டில் (நம்மூழியருக்குப்) போஷணையாயிருக்கட்டும்; அதற் குப்பின் யாம் உங்களுக்கு வானக மழைத் தாரைகளைத் திறந்து விடா மல் போகின்றோமா? (எல்லா நன்மைகளிலும்) சம்பூரணம் வரை யாக நமது நல்லாசியை உங்கள்மீது சொரியாதிருக்கின்றோமா என நம் மைப் பரீட்சியுங்கள் என்கிறார் ஆண்டவர்.
எஜமான் அவனைப்பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழி யனே! நீ சொற்பக்காரியங்களில் பிர மாணிக்கனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரி யாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.
நல்ல மனிதன் தன் இருதயமா கிய நல்ல பொக்கிஷத்தினின்று நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறான். கெட்ட மனிதனும் கெட்ட பொக்கிஷத்தினின்று கெட்டவைகளை எடுத்துக் காட்டுகிறான். ஏனெனில் இருதயத்தின் நிறைவாகவேதான் வாய் பேசுகின்றது.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர் கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள். (லூக். 6:21.)
* 6. நீதி:- நீதியென்றால் புண்ணிய சாங்கோபாங்க நெறியாகும்; வேதாகமத்தில் நீதி என்னும் இச்சொல் இந்த அர்த்தத்திலே பல இடங்களில் வழங்குகிறது.