உங்கள் அடக்கவொடுக்கம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக; கர்த்தர் அருகில் இருக்கிறார்.
*** 5. கர்த்தர் அருகில் இருக்கிறார்:- அதாவது உதவிசெய்யக் காத்திருக்கிறார்.
காலத்தை மீட்டுக்கொண்டு, புறம்பேயிருக்கிறவர்கள்மட்டில் விவே கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.
*** 5. எபேசியர் நிருபம் 5-ம் அதிகாரம் 16-ம் வசன வியாக்கியானம் காண்க. புறம்பேயிருக்கிறவர்கள்மட்டில் விவேகம்:- அஞ்ஞானிகளால் உங்கள் ஆத்துமங் களுக்கு எவ்விதத்திலும் கெடுதல் வராதபடிக்கு அவர்கள் நடுவில் எச்சரிக்கையாய் நடந்து, தருணத்தையும் சமயத்தையும் பார்த்து திறமையான முறையில் அவர்களுக்கு நல்ல புத்தி சொல்லுங்கள். வேதத்தைக்குறித்து அவர்கள் கேட்கிற கேள்விகளுக்குத் தக்க மறு மொழி சொல்லவும், அதன்பேரில் அவர்கள் சொல்லுகிற தூஷணங்களை திறமையான முறையில் மறுக்கவும், அவனவனுடைய அந்தஸ்துகளுக்குத்தக்கது நடப்பித்துக் கொள்ளவும் வேணுமென்று அர்த்தமாம். அவனவனுக்கு இன்னவிதமாக மறுமொழி சொல்லவேண்டுமென்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு உங்கள் பேச்சு எப்போதும் இனிதாகவும், (விவேகமாகிய) உப்பின் சாரமுள்ளதாகவும் இருக்கவேண்டியது.
உன் சகோதரனை உன் இருதயத்தில் பகைக்காதே. ஆனால் அவனுடைய பாவத்திற்கு நீ உடந்தை யாகாதபடிக்கு பிரசித்தமாய் அவனுக் குப் புத்திசொல்லக் கடவாய் (1அரு.2:1, 3:4; சர்வப். 19:13; மத். 18:5; லூக். 1:; மத்.5:43, 22:9; லுக்.6:7; உரோ.13:9) பழிக்குப் பழி வாங்கத் தேடாதே. உன் சனத்தார் உனக்கு அநியாயம் செய்தாலும் மனதில் பொறாமை கொள்ளாதே. உன்னில் நீ அன்பு கூர்வதுபோலே உன் சிநேகிதனிலும் அன்பு கூர்வாயாக. நாம் ஆண்டவர்,
இதனாலே நாம் இனிமேல் ஒருவருக்கொருவர் தீர்ப்பிடாதிருப்போமாக; ஆனால் நீங்கள் உங்கள் சகோதரனுக்கு இடறலாய் அல்லது துர்மாதிரிகையாய் இருக்கப்படாதென்று முக்கியமாய்த் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்ளுகிறவனோ, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத். 10:40.)