5. காலத்தை மீட்டுக்கொண்டு, புறம்பேயிருக்கிறவர்கள்மட்டில் விவே கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.
*** 5. எபேசியர் நிருபம் 5-ம் அதிகாரம் 16-ம் வசன வியாக்கியானம் காண்க. புறம்பேயிருக்கிறவர்கள்மட்டில் விவேகம்:- அஞ்ஞானிகளால் உங்கள் ஆத்துமங் களுக்கு எவ்விதத்திலும் கெடுதல் வராதபடிக்கு அவர்கள் நடுவில் எச்சரிக்கையாய் நடந்து, தருணத்தையும் சமயத்தையும் பார்த்து திறமையான முறையில் அவர்களுக்கு நல்ல புத்தி சொல்லுங்கள். வேதத்தைக்குறித்து அவர்கள் கேட்கிற கேள்விகளுக்குத் தக்க மறு மொழி சொல்லவும், அதன்பேரில் அவர்கள் சொல்லுகிற தூஷணங்களை திறமையான முறையில் மறுக்கவும், அவனவனுடைய அந்தஸ்துகளுக்குத்தக்கது நடப்பித்துக் கொள்ளவும் வேணுமென்று அர்த்தமாம்.
6. அவனவனுக்கு இன்னவிதமாக மறுமொழி சொல்லவேண்டுமென்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு உங்கள் பேச்சு எப்போதும் இனிதாகவும், (விவேகமாகிய) உப்பின் சாரமுள்ளதாகவும் இருக்கவேண்டியது.