நீங்கள் எந்த வேலை செய்தாலும் மனிதருக்காகச் செய்வதுபோல் செய்யாமல், ஆண்டவருக்காகவே செய்வதுபோல நெஞ்சாரச் செய்யுங்கள். அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களைத் தம் வாரிசுகளாக்குவார் என உங்களுக்குத் தெரியுமன்றோ? நீங்கள் ஊழியம் செய்யவேண்டியது ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கே.
உங்களுள் எவனுக்காவது ஞானம் குறைவாயிருந்தால், அவன் கடவுளிடம் கேட்கட்டும்; அவனுக்குக் கொடுக்கப்படும். முகம் கோணாமல் தாராளமாக எல்லாருக்கும் கொடுப்பவர் அவர்.
கடவுள் உங்களை எல்லா நன்மைகளாலும் நிரப்பவல்லவர்; எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் போதுமான அளவில் உங்களிடம் இருக்கச் செய்வார்; அதோடு எந்தசெயலையும் செய்வதற்குத் தேவையான பொருள் உங்களிடம் மிகுதியாகவே இருக்கச் செய்வார்.
நீங்களோ அவரிடமிருந்து அபிஷுகம் பெற்றிருக்கிறீர்கள்; அந்த அபிஷுகம் உங்களில் நிலைத் திருக்கிறது; ஆகவே ஒருவரும் உங்களுக்குக் கற்பிக்கத் தேவையில்லை; அவரது அபிஷுகமே உங்களுக்கு எல்லாவற்றைக் குறித்தும் கற்பித்து வருகிறது. உண்மையைத்தான் கற்பித்து வருகிறது, பொய்யையன்று. எனவே, அது உங்களுக்குக் கற்பித்தது போல அவருள் நிலைத்திருங்கள்.
என் வாழ்நாட்களில் மகிழ்வதையும் நன்மை செய்வதையும்விட நலமானது ஒன்றுமில்லை என்று அறிந்தேன். ஏனென்றால், ஒருவன் உண்டு குடித்துத் தன் உழைப்பால் உண்டான நன்மையைப் பார்ப்பது அவனுக்குக் கடவுள் தந்த வரம்.
தமக்கேயுரிய மாட்சிமையாலும், ஆற்றலாலும் நம்மை அழைத்த இறைவனை அறியச் செய்யும் அறிவின் வாயிலாக, இறைப்பற்றுடன் கூடிய வாழ்வை வளர்க்கும் அனைத்தையும் அவரது தெய்வீக வல்லமை நமக்கு வழங்கியுள்ளது.
எனினும் நான் உங்களுக்குச் சொல்வது உண்மை: நான் போவதே உங்களுக்கு நல்லது; போகாவிடில், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்; போனால்தான் அவரை உங்களிடம் அனுப்புவேன்.
இறைவன் உங்களை அழைத்ததால் எத்தகைய நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், இறைமக்களிடையே அவர் உங்களுக்கு அளிக்கும் உரிமைப் பேற்றின் மாட்சிமை எவ்வளவு வளம் மிக்கது என்றும்,