செல்வம் சேர்க்க விரும்புகிறவன் சோதனைகளில் வீழ்கிறான்; பேயின் வலையில் சிக்குகிறான். தீமை விளைவிக்கும் மதிகேடான பல்வேறு ஆசைகளில் அமிழ்ந்து விடுகிறான். இவையோ அவனைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்திவிடும்.
பின் மக்களைப் பார்த்து, "எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள். ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு தானிருந்தாலும் செல்வப்பெருக்கினால் வாழ்வு. வந்துவிடாது" என்றார்.
இவற்றை எல்லாம் உமக்குக் கொடுக்க நான் யார்? என் குடிகளுக்கும் என்ன உரிமை இருக்கிறது? எல்லாம் உம்முடையன. உம் கைகளினின்று நாங்கள் பெற்றுக்கொண்டதையே உமக்குத் திரும்பக் கொடுத்துள்ளோம்.
இவ்வுலகில் செல்வம் படைத்தவர் இறுமாப்புக் கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல், நமது இன்பத்துக்காக எல்லாவற்றையும் ஏராளமாக அளிக்கும் கடவுளில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும்.
தீயோருடைய திரளான செல்வத்தை விட, நல்லவருடைய சிறிதளவு பொருள் மேலானது. ஏனெனில், பாவிகளின் வலிமை நிலைகுலைந்து போகும்: ஆண்டவர் நீதிமான்களை நிலை நிறுத்துவார்.