Topic : Joy

எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்.
இடைவிடாது செபியுங்கள்.
என்ன நேர்ந்தாலும் நன்றிகூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவில் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.

1 Thessalonians 5:16-18

உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் மாவீரர், வெற்றி தருபவர்; உன் மட்டில் அவர் மகிழ்ச்சியால் அக்களிப்பார், தம் அன்பினால் உன்னைப் புதுப்பிப்பார்; திருவிழா நாளில் செய்வதுபோல், உன்னைக் குறித்து உரக்கப் பாடித் துள்ளுவார்" என்பார்கள்.

Zephaniah 3:17

ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன்.: 'அகமகிழுங்கள்.

Philippians 4:4

நம்பிக்கை கொண்டவர்களாய் மகிழ்ச்சியோடு இருங்கள்; வேதனையில் மன ஊறுதியோடு இருங்கள்; செபத்தில் நிலையாய் இருங்கள்.

Romans 12:12

என் இதயத்தில் கவலைகள் மிகும் வேளையில், உமது ஆறுதல் என் ஆன்மாவை இன்பத்தில் ஆழ்த்துகிறது.

Psalms 94:19

ஆண்டவர் குறித்த நாள் இதுவே: இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம்.

Psalms 118:24

அத்திமரங்கள் பூக்காவிட்டாலும், திராட்சைக் கொடிகளில் பழமில்லாவிட்டாலும், ஒலிவமரங்களின் பலன் அற்றுப் போயினும், வயல்களில் விளைச்சல் கிடைக்காவிடினும், கிடையில் ஆடுகள் இல்லாமற் போனாலும், தொழுவங்களில் மாடுகள் இல்லாதிருந்தாலும்,
நான் ஆண்டவரில் அக்களிப்பேன், என் மீட்பரான கடவுளில் அகமகிழ்வேன்.

Habakkuk 3:17-18

வாழ்வுக்குச் செல்லும் வழியை நீர் எனக்குக் காண்பிப்பீர்: உம் திருமுன் எனக்கு நிறை மகிழ்ச்சியையும், உம் வலக்கையில் இடைவிடா இன்பத்தையும் நீர் காட்டுவீர்.

Psalms 16:11

நீங்கள் அவரைப் பார்ப்பதில்லை; எனினும், அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்போதும் நீங்கள் அவரைப் பார்க்கிறதில்லை; எனினும், அவர்மீது விசுவாசம் கொண்டு, சொல்லொண்ணா மகிழ்ச்சியும், மகிமை நிறை அக்களிப்பும் உற்று,
உங்கள் விசுவாசத்தின் இறுதிப் பயனாக ஆன்ம மீட்பை அடைகிறீர்கள்.

1 Peter 1:8-9

ஆண்டவரில் நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன், என் கடவுளிடம் எனதான்மா களிகூரும்; மணிமுடி சூட்டப்பட்ட மணவாளனைப் போலும், அணிகலன்களால் அழகு செய்யப்பட்ட மணவாட்டியைப் போலும் மீட்பின் ஆடைகளை எனக்கு உடுத்தினார், நீதியின் மேலாடையை எனக்குப் போர்த்தினார்.

Isaiah 61:10

இதுவரையில் என் பெயரால் நீங்கள் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்; அப்போது உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறும்.

John 16:24

ஒவ்வொருவனும் தனக்குள் முடிவு செய்தவாறு கொடுக்கட்டும்; முகவாட்டத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடாதீர்கள்; ஏனெனில் முகமலர்ச்சியுடன் கொடுப்பவன் மேல்தான் கடவுள் அன்புகூர்கிறார்.

2 Corinthians 9:7

மனிதன் தன் வாயின் வாக்கில் மகிழ்கிறான். காலத்துக்கேற்ற உரையே சிறந்ததாம்.

Proverbs 15:23

ஆகவே, நான் என் குறைபாடுகளைக் காணும்போது, இழிவுறும்போது, நெருக்கடியில் இருக்கும்போது, துன்புறுத்தப்படும்போது, இடுக்கண்ணுறும் போது கிறிஸ்துவை முன்னிட்டு நான் மனநிறைவோடு இருக்கிறேன். ஏனெனில், வலுவின்றி இருக்கும்போது தான் நான் வலிமை மிக்க வனாயிருக்கிறேன்.

2 Corinthians 12:10

ஆண்டவரே, நீர் எனக்கு அடைக்கலமாய் உள்ளீர், இன்னல்கள் அனைத்தினின்றும் என்னைக் காத்தருள்வீர்: உம் மீட்பால் வரும் மகிழ்வாலே என்னை அணைக்கின்றீர்."

Psalms 32:7

மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்.

Romans 12:15

இவ்வாறு கடவுளின் திருவுளத்தால் மகிழ்ச்சியுடன் நான் உங்களிடம் வரும்போது என் மனங்குளிரும்படியும் எனக்காக மன்றாடுங்கள். சமாதானத்திற்கு ஊற்றாகிய கடவுள் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! ஆமென்.

Romans 15:32

உம் ஆணைகளே என்றென்றைக்கும் என் உரிமைச் சொத்து: ஆகவே அவை என் இதயத்துக்கு மகிழ்வளிக்கின்றன.

Psalms 119:111

ஆம், பக்தி நெறி நல்ல ஆதாயம் தருவதுதான்; ஆனால் போதுமென்ற மனமுள்ளவர்களுக்கே தரும்.

1 Timothy 6:6

விசுவாசத்தினாலன்றி ஒருவனும் கடவுளுக்கு உகந்தவனாயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்கிறவன் அவர் இருக்கிறார் என்றும், தம்மைத் தேடுபவர்களுக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறாரென்றும் விசுவசிக்க வேண்டும்.

Hebrews 11:6

ஏனெனில் ஆண்டவர் தம் மக்கள் மீது அன்பு கூர்கிறார்: தாழ்ந்தவர்களுக்கு மீட்பளித்து அணி செய்கிறார்.

Psalms 149:4

இவ்வுலகில் செல்வம் படைத்தவர் இறுமாப்புக் கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல், நமது இன்பத்துக்காக எல்லாவற்றையும் ஏராளமாக அளிக்கும் கடவுளில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும்.

1 Timothy 6:17

பெருஞ் செல்வத்தில் மகிழ்ச்சி கொள்வது போல், நான் உம் ஆணைகளைக் குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.

Psalms 119:14

நீதிமானின் தந்தை மிகுதியாக அக மகிழ்கிறான். ஞானியைப் பெற்றவன் அவனைப் பற்றி மகிழ்கிறான்.

Proverbs 23:24

அவர் பேசிக் கொண்டிருக்கையிலே, இதோ! ஒளிரும் மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. "இவரே என் அன்பார்ந்த மகன்! இவரிடம் நான் பூரிப்படைகிறேன்; இவருக்குச் செவி சாயுங்கள்" என்ற குரலொலி, இதோ! மேகத்திலிருந்து கேட்டது.

Matthew 17:5


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |