எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள். இடைவிடாது செபியுங்கள். என்ன நேர்ந்தாலும் நன்றிகூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவில் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், எல்லாத் தேவைகளிலும் நன்றியோடு கூடிய செபத்திலும் மன்றாட்டிலும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை ஒப்படையுங்கள். அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் உள்ளத்துக்கும் மனத்துக்கும் அரணாயிருக்கும்.
சகோதரர்களே, உங்களை நினைத்துக் கடவுளுக்கு நாங்கள் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே. ஏனெனில், உங்கள் விசுவாசம் வளர்ந்து ஓங்குகிறது; நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பும் பெருகி வருகிறது.
கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இதயங்களில் ஆட்சி புரிவதாக. இச் சமாதானத்திற்கே நீங்கள் ஒரே உடலின் உறுப்பினராய் அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயும் இருங்கள்.
கிறிஸ்துவின் வார்த்தை நிறை வளத்தோடு உங்களுள் குடிகொள்வதாக. முழு ஞானத்தோடு ஒருவருக்கொருவர் போதியுங்கள். அறிவு புகட்டுங்கள். தேவ ஆவி ஏவிய சங்கீதங்களையும் புகழ்ப்பாக்களையும் பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடுங்கள்.
நீங்களும் எல்லா வகையிலும் செல்வர்களாகி, உங்கள் வள்ளன்மையில் எக்குறைவுமின்றி விளங்குவீர்கள்; எங்கள் பணியின் வாயிலாக அவ்வள்ளன்மை மக்களின் நன்றியறிதலைக் கடவுள்பால் எழும்பச் செய்யும்.