ஆகையால் நீங்கள் போய், சகல ஜாதி ஜனங்களுக்கும் உபதேசித்து: பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத் தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, (மாற். 16:15.)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அனுசரிக்கும்படி அவர்களுக்குப் போதியுங்கள். இதோ நான் உலகமுடியுமட்டும் எந்நாளும் உங்களோடுகூட இருக்கிறேனென்று திருவுளம்பற்றினார்.
* 20. அப்போஸ்தலர்கள் மரிப்பார்களென்று சேசுநாதர் அறிந்திருந்தும், உலக முடியுமட்டும் அவர்களோடுகூடத் தாமிருக்கிறதாகச் சொல்லுகிறபடியால், அப்போஸ்தலர்களுடைய மரணத்துக்குப்பின், அவர்களுடைய ஸ்தானத்திலே இருக்கிறவர்களோடும் சேசுநாதர் சுவாமி வசிக்கிறாரென்று சொல்லவேண்டியது. அப்போஸ்தலர்களுடைய ஸ்தானங்களும் உலகமுடியுமட்டும் நிலைநிற்குமென்று நிச்சயமாயிருக்கிறது.
Matthew 28:19-20