அவர் பரலோகத்துக்கு எழுந்தருளிப்போகிறதை அவர்கள் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ வெண்ணுடையணிந்தவர்களாகிய இரண்டுபேர் அவர்கள் அருகே வந்து நின்று,
*** 10. இரண்டுபேர் என்பது அர்ச். அருளப்பர் சுவிசேஷம் 20-ம் அதி. 12-ம் வசனத்தில் கண்டபடி மனித ரூபமாய்த் தோன்றிய இரண்டு சம்மனசுக்கள் என்றறிக.
அவர்களை நோக்கி: கலிலேய மனிதரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு நிற் கிறீர்கள்? உங்களிடத்தினின்று பரலோ கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த சேசுநாதர் எப்படிப் பரலோ கத்துக்கு எழுந்தருளிப் போகக் கண்டீர் களோ, அப்படியே திரும்பவும் வருவார் என்றார்கள்.
Acts 1:10-11