தீபத்தைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்காமல் வீட்டிலுள்ள யாவருக்கும் பிரகாசிக்கும்படி அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள். (மாற். 4:21; லூக். 8:16.) அவ்வண்ணமே மனிதர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரமண்டலங்களிலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் பொருட்டு, உங்கள் ஒளி அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (1 இராய. 2:12.)
கெட்ட பேச்சு ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம். விசுவாசத்தின் நல்விருத்திக் கேதுவான பேச்சு உண்டானால், கேட்கிறவர்களுக்குப் பக்தியை வருவிக்கும்படி அதைப் பேசுங்கள்.
இன்னுங் கர்த்தர் பின்வரு மாறு சொல்லுகிறதாவது: வழியில் நின்று பார்த்துக்கொண்டு: உங்கள் பழைய நடபடிகளென்ன, எது நல்ல வழி என்று விசாரித்து அதில் நட வுங்கள்; அப்போது உங்கள் மனங் குளிருமாம்; அதற்கு அவர்களோ அவ்வழியே செல்லமாட்டோம் என்றார்கள் (மத்.11:20).
மேலும் நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் உங்களுக்குப் போதுமான யாவற்றையுங் கொண்டிருந்து, எவ்வித நற்கிரியைகளிலும் சம்பூரணமுள்ளவர்களாகும்படி சர்வேசுரன் உங்களிடத்தில் எவ்வித நன்மைகளையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
இவரே நம்மைச் சகல அக்கிரமங்களிலும் நின்று இரட்சித்து, நம்மைச் சுத்தமாக்கி, தமக்கு உகந்தவர்களும், நற்கிரியைகளில் வைராக்கி யருமான ஜனமாக்கிக்கொள்ளும் படி தம்மைத்தாமே நமக்காகக் கை யளித்தார்.