ஒருவன் தன் சிநேகிதர்களுக்காகத் தன் பிராணனைக் கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிறவைகளைச் செய்வீர்களாகில் என் சிநேகிதராய் இருப்பீர்கள். (1 அரு. 3:16.)
சர்வேசுரனைச் சிநேகிக்கிறவன் தன் சகோதரனையும் சிநேகிக்கக்கடவான் என்கிற இந்தக் கற்பனையைச் சர்வேசுரனிடத்தில் நாம் பெற்றிருக்கிறோம். (அரு. 13:34; 15:12; எபே. 5:2.)
எனக்கு மிகவும் பிரியமானவர்களே, நாம் ஒருவரொருவரைச் சிநேகிப்போமாக. ஏனெனில் சிநேகம் சர்வேசுரனால் உண்டாயிருக்கிறது. ஆகையால் சிநேகமுள்ளவனெவனும் சர்வேசுரனால் பிறந்து, சர்வேசுரனை அறிந்திருக்கிறான்.