நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனுடைய சமுகத்தில் பரிசுத்தமும் மாசற்றதுமான தேவபக்தி ஏதெனில், அநாதைப்பிள்ளைகளையும், விதவை களையும் அவர்களுடைய துன்பத்தில் சந்திக்கிறதும், இப்பிரபஞ்சத்தினின்று தன்னை மாசற்றவனாய்க் காப்பாற்று கிறதும் என்க.
* 14-15. இதிலே அர்ச். இயாகப்பர் இருவகைச் சோதனைகளைப்பற்றிப் பேசுகிறார். அதன் முதலாவது: கஸ்தி, துன்பம், வியாதி, தரித்திரம் முதலிய பாவத்துக்குச் சம்பந்தப்படாததும், ஆத்துமத்துக்குப் புறத்திப்பட்டதுமான சோதனைகள். அப்படிப் பட்ட சோதனைகளைச் சர்வேசுரன்தான் அனுப்புகிறார். ஆகையால் நல்ல கிறீஸ்துவன் அவைகளெல்லாம் சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட சோதனைகளென்று அறிந்து, சர்வேசுரனுடைய சித்தத்துக்கு இணங்கி, அவைகளைப் பொறுமையோடு சகித்துக் கொள்வதினால் பாக்கியவானாவான். ஏனென்றால் நாம் பொறுமையோடு சகித்துக் கொள்ளுகிற அப்படிப்பட்ட சோதனைகள் பாவத்துக்கு உத்தரிப்பாக ஆத்துமத்தைச் சுத்திகரிக்கவும், புண்ணிய பலன்களைப் பெறுவிக்கவும் உதவுவதுமன்றி, அவைகளுக்குச் சம்பாவனையாக மோட்சத்தில் நித்திய ஜீவிய முடியைப் பெறுவதற்குங் காரணமா யிருக்கின்றன. எல்லா அர்ச்சியசிஷ்டவர்களும் இப்படிப்பட்ட சோதனைகளால் பரீட்சிக்கப்படுவதுந்தவிர அர்ச்சியசிஷ்டதனத்தில் எவ்வளவுக்கு உயர்த்துபோகிறார்களோ, அப்படிப்பட்ட சோதனைகளால் அவ்வளவுக்கு அதிகமாய்ச் சோதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. அப்படியே தட்டானானவன் பொன்னை உலையில் சோதிக்கிறது போல் சர்வேசுரன் நீதிமான்களைப் பரிசோதிக்கிறாரென்று ஞானாகமம் 3-ம் அதிகாரம் 5-ம், 6-ம் வசனங்களில் சொல்லியிருக்கின்றது. இந்தப்பிரகாரமாய்ச் சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமாயிருந்த அபிரகாமுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது. இவ்வண்ண மாய் யோபு ஆகமம் முதலாம் அதிகாரம் 8-ம்வசனத்தில்: என் தாசனாகிய யோபு என்பவனைப்போல் சற்குணமுள்ளவனும், நீதிமானும், சர்வேசுரனுக்குப் பயந்து தின்மைக்கு விலகி நடக்கிறவனும் இல்லையென்று சர்வேசுரன் தாமே அவரைக் குறித்து சாட்சி கொடுத்தாலும், நிகரில்லாத துன்பங்களால் அவரைச் சோதிக்கும்படி சர்வேசுரன் சாத்தானுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படியே தோபியாஸ் சர்வேசுரனுக்குப் பிரியமுள்ளவராயிருந்ததினால், சோதனைகளால் பரீட்சிக்கப்பட வேண்டியதாயிருந்த தென்று தோபியாஸ் ஆகமம் 12-ம் அதிகாரம் 13-ம் வசனத்தில் சொல்லப்பட்டிக்கிறது. 2-ம் வகை சோதனையாவது: விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், பிறர்சிநேகம் முதலிய புண்ணியங்
James 1:27