Topic : World

நீங்கள் இவ்வுலகத்துக்கு ஏற்றபடி நடவாமல், சர்வேசுரனுடைய சித்தத் துக்கு இன்னது நலமாகவும், பிரிய மாகவும், உத்தமமாகவும் இருக்கிற தென்று அறிந்துகொள்ளும்படி உங்கள் மனதைப் புதிப்பித்து, உங்களைச் சீர்திருத்திக்கொள்ளுங்கள். (எபே. 5:17; 1 தெச. 4:3.)

Romans 12:2

உலகத்தையும் உலகத்திலுள்ளவைகளையும் சிநேகியாதேயுங்கள். ஒருவன் உலகத்தைச் சிநேகித்தால், அவனிடத்தில் பிதாவின் சிநேகமிராது.

1 John 2:15

ஏனெனில் நமது இரட்சகராகிய சர்வேசுரனுடைய வரப்பிரசாதம் சகல மனிதருக்கும் வெளியாகி, (தீத்து. 3:4.)
நாம் அவபக்தியையும், இலெளகீக இச்சைகளையும் வெறுத்து விட்டு, இவ்வுலகத்தில் மன அமைதி யோடும், நீதியோடும், பக்தியோடும் நடக்கவும்,

Titus 2:11-12

என்மட்டில் நீங்கள் சமாதானத்தைக் கொண்டிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். இவ்வுலகத்தில் உங்களுக்கு நெருக்கிடை உண்டாகும்; ஆயினும் திடமாயிருங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் என்று திருவுளம்பற்றினார். (அரு. 14:27.)

John 16:33

மனிதனானவன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும், தன் ஆத்துமத்தைச் சேதப்படுத்துவானாகில் அவனுக்குப் பிரயோஜனமென்ன?

Mark 8:36

ஏனெனில், உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை; இங் கிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோக வுங் கூடாது என்பதற்குச் சந்தேக மில்லை. (யோப். 1:21; சங்கப். 5:14.)
ஆகையால் அன்னமும் ஆடையும் இருந்தால், இதுவே நமக்குப் போதுமென்று இருக்கக்கடவோம். (பழ. 27:26, 27.)

1 Timothy 6:7-8

பின்னும் அவர் அவர்களுக்குத் திருவுளம் பற்றினதாவது: நீங்கள் உலக மெங்கும் போய், எல்லாச் சிருஷ்டிகளுக் கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

Mark 16:15

ஆயினும் உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம். தெய்வ சித்தத்தை நிறைவேற்றுகிறவனோ என்றென்றைக்கும் நிலைநிற்பான்.

1 John 2:17

விபசாரக்காரரே, இவ்வுலகத்தின் சிநேகம் சர்வேசுரனுக்குப் பகை யாயிருக்கிறதென்று அறியீர்களோ? ஆகையால் இவ்வுலகத்துக்குச் சிநேகித னாயிருக்க விரும்புகிறவன் சர்வேசுர னுக்குத் தன்னைப் பகைஞனாக்கிக் கொள்ளுகிறான். (லூக். 6:26; 1 அரு. 2:15.)

James 4:4

நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்பட்டு, மெய்யாகவே அவருக்குப் பிள்ளைகளாயிருக்கும்படிக்கு எத்தன்மையான பரம அன்பைப் பிதாவானவர் நமக்குத் தந்தருளினாரென்று பாருங்கள். ஆகையால் உலகம் நம்மை அறியாதிருந்தால், அது அவரையும் அறியாதிருப்பதே அதற்குக் காரணம். (உரோ. 8:15.)

1 John 3:1

சர்வேசுரனால் பிறந்ததெல்லாம் உலகத்தை ஜெயிக்கின்றது; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கின்ற ஜெயமாமே.

1 John 5:4

ஏனெனில் நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்துக்கொத்தபடி போராடுகிறவர்களல்ல.

2 Corinthians 10:3

சமாதானத்தை உங்களுக்கு வைத் துவிட்டுப் போகிறேன்; என் சமாதானத் தை உங்களுக்குத் தருகிறேன். உலகம் கொடுக்கிறதைப்போல நான் (அதைக்) கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், அஞ்சாமலும் இருப்பதாக.

John 14:27

உள்ளவைகளை அழிக்கும்படி சர்வேசுரன் உலகத்தில் இழிவானவைகளையும், நீசமானவைகளையும், இல்லாதவைகளையும் தெரிந்துகொண்டார்.
ஏனெனில் மாம்சமான எவனும் அவருடைய சமுகத்தில் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய் தருளினார்.

1 Corinthians 1:28-29

சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய ஏக சுதனைத் தந்து, அவர்மேல் விசு வாசமாயிருக்கிற எவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படி அருளியிருக்கிறார். (1 அரு. 4:9; உரோ. 5:8.)

John 3:16

ஏனெனில் உலகத்திலுள்ள யாவும் சரீர இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவியத்தின் அகங்காரமுமாயிருக்கின்றது. அவைகள் பிதாவினிடத்தினின்று வராமல் உலகத்தினின்றே வருகின்றது.

1 John 2:16

சேசுநாதர் மீளவும் ஜனங்களோடு பேசி, அவர்களை நோக்கி: நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்செல்லுகிறவன் இருளிலே நடவாமல், ஜீவியத்தின் ஒளியைக் கொண் டிருப்பான் என்றார். (1 அரு. 1:5, 9; 9:15.)

John 8:12

ஒருவனும் தன்னைத்தான் ஏய்க்க வேண்டாம். இப்பிரபஞ்சத்தில் உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால், அவன் ஞானியாயிருக்கும்படிக்குப் பைத்தியகாரனாகக் கடவான்.

1 Corinthians 3:18

எவ்வாறெனில், கண்ணுக்கெட்டாத அவருடைய இலட்சணங்கள் உலகமுண்டானதுமுதல் சிருஷ்டிக்கப் பட்ட பொருட்களாலே புத்திக்கெட் டும்படியாகி, அவருடைய நித்திய வல்லமையையும், தெய்வீகத்தையுங் கூட விளங்கப்பண்ணுவதால் அவர் கள் போக்குச்சொல்வதற்கு இடமே யில்லை

Romans 1:20

மெய்யாகவே மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டா லும், தன் ஆத்துமம் சேதப்பட்டால் அவனுக்குப் பிரயோசனமென்ன? அல்லது தன் ஆத்துமத்துக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

Matthew 16:26


நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனுடைய சமுகத்தில் பரிசுத்தமும் மாசற்றதுமான தேவபக்தி ஏதெனில், அநாதைப்பிள்ளைகளையும், விதவை களையும் அவர்களுடைய துன்பத்தில் சந்திக்கிறதும், இப்பிரபஞ்சத்தினின்று தன்னை மாசற்றவனாய்க் காப்பாற்று கிறதும் என்க. * 14-15. இதிலே அர்ச். இயாகப்பர் இருவகைச் சோதனைகளைப்பற்றிப் பேசுகிறார். அதன் முதலாவது: கஸ்தி, துன்பம், வியாதி, தரித்திரம் முதலிய பாவத்துக்குச் சம்பந்தப்படாததும், ஆத்துமத்துக்குப் புறத்திப்பட்டதுமான சோதனைகள். அப்படிப் பட்ட சோதனைகளைச் சர்வேசுரன்தான் அனுப்புகிறார். ஆகையால் நல்ல கிறீஸ்துவன் அவைகளெல்லாம் சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட சோதனைகளென்று அறிந்து, சர்வேசுரனுடைய சித்தத்துக்கு இணங்கி, அவைகளைப் பொறுமையோடு சகித்துக் கொள்வதினால் பாக்கியவானாவான். ஏனென்றால் நாம் பொறுமையோடு சகித்துக் கொள்ளுகிற அப்படிப்பட்ட சோதனைகள் பாவத்துக்கு உத்தரிப்பாக ஆத்துமத்தைச் சுத்திகரிக்கவும், புண்ணிய பலன்களைப் பெறுவிக்கவும் உதவுவதுமன்றி, அவைகளுக்குச் சம்பாவனையாக மோட்சத்தில் நித்திய ஜீவிய முடியைப் பெறுவதற்குங் காரணமா யிருக்கின்றன. எல்லா அர்ச்சியசிஷ்டவர்களும் இப்படிப்பட்ட சோதனைகளால் பரீட்சிக்கப்படுவதுந்தவிர அர்ச்சியசிஷ்டதனத்தில் எவ்வளவுக்கு உயர்த்துபோகிறார்களோ, அப்படிப்பட்ட சோதனைகளால் அவ்வளவுக்கு அதிகமாய்ச் சோதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. அப்படியே தட்டானானவன் பொன்னை உலையில் சோதிக்கிறது போல் சர்வேசுரன் நீதிமான்களைப் பரிசோதிக்கிறாரென்று ஞானாகமம் 3-ம் அதிகாரம் 5-ம், 6-ம் வசனங்களில் சொல்லியிருக்கின்றது. இந்தப்பிரகாரமாய்ச் சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமாயிருந்த அபிரகாமுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது. இவ்வண்ண மாய் யோபு ஆகமம் முதலாம் அதிகாரம் 8-ம்வசனத்தில்: என் தாசனாகிய யோபு என்பவனைப்போல் சற்குணமுள்ளவனும், நீதிமானும், சர்வேசுரனுக்குப் பயந்து தின்மைக்கு விலகி நடக்கிறவனும் இல்லையென்று சர்வேசுரன் தாமே அவரைக் குறித்து சாட்சி கொடுத்தாலும், நிகரில்லாத துன்பங்களால் அவரைச் சோதிக்கும்படி சர்வேசுரன் சாத்தானுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படியே தோபியாஸ் சர்வேசுரனுக்குப் பிரியமுள்ளவராயிருந்ததினால், சோதனைகளால் பரீட்சிக்கப்பட வேண்டியதாயிருந்த தென்று தோபியாஸ் ஆகமம் 12-ம் அதிகாரம் 13-ம் வசனத்தில் சொல்லப்பட்டிக்கிறது. 2-ம் வகை சோதனையாவது: விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், பிறர்சிநேகம் முதலிய புண்ணியங்

James 1:27

சேசுநாதரே சர்வேசுரனுடைய குமாரனென்று விசுவசிக்கிறவனே யன்றி, உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? (1 கொரி. 15:57; 1 அரு. 4:15.)

1 John 5:5

அவர் வழியாக (சர்வேசுரன்) நமக்கு மகா மேன்மையும் விலையேறப் பெற்றதுமான வாக்குத்தத்தங்களைக் கொடுத்து, அவைகளால் நாம் உலகத்தி லுள்ள துர் இச்சைகளின் கேட்டுக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்துக்குப் பங்காளி களாகும்படி செய்கிறார். (எபே. 4:22.)

2 Peter 1:4

நம்முடைய பாவங்களுக்கு அவரே பிராயச்சித்தப்பலியாய் இருக்கிறார். நம்முடைய பாவங்களுக்காக மாத்திர மல்ல, சர்வலோக பாவங்களுக்காகவும் அவர் பிராயச்சித்தப்பலியாமே.

1 John 2:2


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |