21. இப்பொழுதோ, சர்வேசுரனுடைய நீதியானது வேதப்பிரமாணமின்றி வெளியாக்கப்பட்டிருக்கிறது. வேதப்பிரமாணமும் தீர்க்கதரிசனமும் அதற்குச் சாட்சியாக நிற்கின்றது.
*** 20-21. வேதப்பிரமாணத்தின் வழியாய்ப் பாவத்தின் அறிவு உண்டாகிறது:- மோயீசன் வழியாய்ச் சர்வேசுரன் கட்டளையிட்ட பத்துக்கற்பனைகளினாலும் சடங்குகளினாலும் பாவமிது புண்ணியமிதென்று யூதர்கள் அறிந்துகொண்டார்களேயயாழிய பழைய ஏற்பாட்டின் சடங்குகளை அனுசரித்ததினாலே மாத்திரம் அவர்கள் நீதிமான்களாக்கப்படவில்லை. ஆனால் புதிய ஏற்பாட்டில் சேசுநாதர்சுவாமி ஏற்படுத்திய தேவதிரவிய அநுமானங்களால் மனிதன் நீதிமானாக்கப்படுகிறான். இந்தத் தேவதிரவிய அனுமானங்களெல்லாம் பழைய ஏற்பாட்டின் சடங்குகளை வியர்த்தமாக்கிப் போட்டன.
22. சேசுக்கிறீஸ்துநாதர்பேரிலுள்ள விசுவாசத்தினாலுண்டாகும் சர்வேசுரனுடைய நீதியானது யாதோர் வித்தியாசமுமின்றி அவரை விசுவசிக்கிற எல் லாருக்கும், எல்லார்மேலும் வருகிறது.
*** 21-22. சர்வேசுரனுடைய நீதி:- இவ்வார்த்தை சர்வேசுரனால் நீதிமானாகும் தன்மையென்று அர்த்தங்கொள்ளும்.