17. எப்படியெனில் நீதிமான் விசுவாசத்தினால் ஜீவிக்கிறான் என்று எழுதப் பட்டிருக்கிறபடியே, விசுவாசத்தினின்று விசுவாசத்தில் (வளருவதால்) தேவநீதி அதிலே விளங்குகின்றது. (அபகூக். 2:4; கலாத். 3:11; எபி. 10:38.)
*** 17. விசுவாசத்தினின்று விசுவாசத்தில் வளருவதால்:- சுவிசேஷ போதகமானது ஒருவன் தேவரகசிய விசுவாசத்தைக்கொண்டு, தர்மவழியிலே நடக்கத் துவக்கி, அந்த வழியிலே ஆயுசுகாலம் முழுவதும் நெறி தவறாமல் சென்று கடைசியாய் உத்தமனாகும் படி செய்கிறது. ஆகையால் விசுவாசத்தினின்று என்பது விசுவாசத்தில் துவக்கி என்றும் விசுவாசத்தில் வளருவதால் என்பது விசுவாச நெறிதவறாமல் அதில் ஸ்திரப்பட்டு முடிவுபரியந்தம் நிலைநிற்கிறதென்றும் அர்த்தமாம். அதிலே விளங்குகின்றது:- சுவிசேஷத்தில் விளங்குகிறது என்றர்த்தமாம்.