1. நீங்கள் தீர்க்கப்படாதபடி ஒருவருக்கும் நீங்கள் தீர்ப்பிடாதேயுங்கள். (லூக். 6:37; உரோ . 2:1.)
* 1. சர்வேசுரனால் நாம் தீர்வையிடப்படாதபடிக்கு மற்றவர்கள்மேல் நியாயமின்றிக் குற்றம் நினைக்கவும், சாட்டவும் கூடாதென்று திவ்விய கர்த்தர் இவ்விடத்தில் படிப்பிக்கிறார். வேத புஸ்தகத்தில் தீர்ப்பிடுகிறதென்பது பிறர்மேல் மனதில் குறைவான எண்ணங்கொள்ளுகிறதென்று அர்த்தமாம். இந்த அர்த்தத்தில் அநேக அநேக இடங்களில் இவ்வார்த்தை பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.