14. நீங்கள் உலகத்தின் ஒளியாயிருக்கிறீர்கள். பர்வதத்தின்மேலிருக்கிற பட்டணம் மறைவாயிருக்கமாட்டாது.
* 14. உலகத்தின் ஒளி:- சேசுநாதர் படிப்பித்த வேதம் மாத்திரமே உலகத்துக்கு மெய்யான வெளிச்சமாயிருக்கிறதினால், அதைப் போதிக்கக் குறிக்கப்பட்ட அப்போஸ்தலர்களும் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறார்களென்று சொல்லப்படுகிறார்கள்.