36. ஆனால் மனுஷர்கள் பேசியிருக் கும் ஒவ்வொரு வீண் வார்த்தையின் பேரிலும் தீர்வை நாளில் கணக்குச் சொல்லுவார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
* 36. ஒரு வீண் வார்த்தைக்கும் கணக்குக் கொடுக்கவேண்டியிருக்குமென்று சேசு நாதர்சுவாமி சொல்லுகிறதினாலே அற்பக் குற்றங்களுக்கு தண்டனையாக மறுலோகத்தில் உத்தரிக்கிற ஸ்தலமிருக்கிறதென்று வெளியாகிறது. 38. இவ்விடத்தில் அடையாளமென்பது புதுமை, அல்லது ஆச்சரியமான செய்கை என்று அர்த்தமாம். இன்னும் வேறிடங்களிலும் இப்படியே அர்த்தமாம்.