20. இஸ்பிரீத்துசாந்துவினால் உண்டாயிற்று:- இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் அர்ச். கன்னிமரியாயின் இரத்தத்தைக்கொண்டு திருக்குழந்தையின் சரீரத்தை அவருடைய நிர்மலமான உதரத்திலே உண்டாக்கினாரேயொழிய அவர் திருக்குழந்தைக்குத் தகப்பனல்ல. ஆதாமின் சரீரத்தை சர்வேசுரன் மண்ணாலே உண்டாக்கினதினாலே ஆதாமுக்கு சர்வேசுரன் உண்டாக்கின தகப்பனே தவிர, பெற்ற தகப்பனாகவில்லை என்பது போலவாம்.