14. வார்த்தையானவர் மாம்சமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார். அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவின் ஏக சுதனுக்குரிய மகி மைக்கு நிகராயிருந்தது. (மத். 1:16.)
* 14. இவ்வாக்கியத்தைக் கொண்டு தேவ பிதாவின் வார்த்தையாகிய சுதனிடத்தில் தேவ சுபாவமும், மனுஷசுபாவமுமாகிய இரண்டு சுபாவமுண்டென்று ஒப்பிக்கப்படுகிறது. மாம்சமென்பது வேத வாக்கியங்களில் வழக்கமாய் ஆத்துமமுஞ் சரீரமுமுள்ள மனுஷ சுபாவத்தைக் குறிக்கிறது. ஆகையால் சுதனாகிய சர்வேசுரன் மாம்சமானாரென்கும்போது, அவர் ஒரே ஆளாய் மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனுஷனுமாய் இருக்கின்றார் என்றறிக.