1. ஆதியிலே வார்த்தையிருந்தார். அந்த வார்த்தை சர்வேசுரனிடத்திலிருந்தார். அந்த வார்த்தை சர்வேசுரனாகவும் இருந்தார். (பழ. 8:22-30; ஆதி. 1:1.)
* 1. அர்ச். திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் பிதாவின் வார்த்தை என்னப்படுகிறார். வார்த்தையானது மனதினின்று உற்பத்தியாகிறது போல சுதனும் தேவ பிதாவினின்று உற்பத்தியாகிறார். (மெனோக்கியுஸ்)